விரைவில் வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா ? சுந்தர் சி கொடுத்த அப்டேட்..!

 
1

’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களை விட ’அரண்மனை’ நான்காம் பாகம் வசூலை குவித்து வருகிறது என்பதும் ஐந்தே நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதை அடுத்து இந்த படம் 100 கோடி வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து மேலும் சில சீரிஸ் படங்களை உருவாக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக ’கலகலப்பு 3’ படத்தை இயக்கும் சுந்தர் சி அடுத்ததாக ’அரண்மனை 5’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்துதான் சுந்தர் சி இயக்க இருக்கும் படம் ஆச்சரியத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அதுதான் பிரசாந்த் நடித்த ’வின்னர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த ’வின்னர்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இருபது ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகவும் ’அரண்மனை 5’ மற்றும் ’கலகலப்பு 3’ படங்கள் முடிந்தவுடன் அந்த படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சுந்தர் சி மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் இணைந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web