பிரிட்டிஷ் கால செட் அமைத்து உருவாகிவரும் ‘ஜாக்சன் துரை 2‘

 
1

கடந்த 2016-ம் ஆண்டு சத்யராஜ், சிபிராஜ் மற்றும் பிந்து மாதவி நடித்து வெளியான படம், ‘ஜாக்சன் துரை‘. இதை பி.வி.தரணிதரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில், சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.

From Around the web