ஜே.ஆர்- 28 பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..!

ஜே.ஆர்- 28 பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..!
 
ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானிசங்கர்

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள ஜே.ஆர் 28 படத்துக்கான பூஜை போடப்பட்டது. இதில் படக்குழு அனைவரும் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சினிமா துறையில் பல்வேறு செயல்கள் நடத்தப்படும். அந்த வகையில் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் படத்துக்கான பூஜை போடப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினருடன் நடிகர் ஜெயம் ரவியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் ஜெயம் ரவியின் 41-வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. அதனால் இந்த படத்திற்கான பூஜையும் அன்றே போடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ‘ஜே.ஆர். 28’ என்று படக்குழு குறிப்பிடுகிறது.

முன்னதாக கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி ‘பூலோகம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து இவர்கள் இரண்டாவதாக இணையும் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை விவேக் மேற்கொள்கிறார், இசையமைப்பாளராக ஷாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இதே நிறுவனத்துடன் இணைந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. அஹமத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனா கன மன’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web