படம் இயக்கும் முடிவில் ஜோதிகா மற்றும் அவர் மைத்துனர் கார்த்தி..!
 

 
நடிகர் சூர்யா மற்றும் குடும்பத்தினர்

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகை ஜோதிகாவும் அவருடைய மைத்துனர் கார்த்தியும் படம் இயக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காக்கா காக்கா படத்தில் நடித்த போது நடிகை ஜோதிகா, உடன் நடித்த சூர்யாவை காதலித்தார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2006-ம் ஆண்டு இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது.

இதையடுத்து தனிப்பட்ட வாழ்க்கையில் ஜோதிகா கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-எண்டரி கொடுத்தார். அதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் துணை இயக்குநராக பணியாற்றியவர் கார்த்தி. கடந்த 2012-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான ‘பருத்திவீரன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அன்று முதல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கதை விவாதத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்குவார்களா? அல்லது தனித்தனியாக இயக்குவார்களா? என்பது தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து கதை கேட்பதிலும் அதுகுறித்து விவாதிப்பதிலும் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக தெரிகிறது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தம்பி’ படத்தில் ஜோதிகா, கார்த்தியும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web