கே.ஜி. எஃப் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் தெலுங்கின் ‘பெத்த’ ஸ்டார்..!
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநரான பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து இயக்கவுள்ள புதிய படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
யாஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் படம் தேசியளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
The only soil that is worth remembering is the one soaked in blood!!
— Prashanth Neel (@prashanth_neel) May 20, 2021
Cant wait to make this one with the one and only force @tarak9999#NTR31 it is!!
Wishing you a safe birthday brother 💫
Wishing for a successful collaboration @MythriOfficial @NTRArtsOfficial.#HappyBirthdayNTR pic.twitter.com/jtfYbZ1LCE
கேஜிஎஃப் இரண்டு பாகங்களையும் உருவாக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
அதை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. நேற்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் என்பதால் ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதை ட்விட்டரில் அவர் உறுதி செய்துள்ளார்.