‘வணங்கான்’ படத்திலிருந்து வெளியேறி குறித்து மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/9b4f072d1bc041aac37a08e0b43c1d51.jpg)
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வந்தது. இந்தப் படத்திற்கு ஒரு மாதத்திற்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இதனால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகினார்.
அதையடுத்து தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்து வருகிறார் பாலா. முதலில் சூர்யா நடித்த போது க்ரீத்தி ஷெட்டி தான் கதாநாயகியாக நடித்து வந்தார். தெலுங்கில் பிரபலமான க்ரீத்தி ஷெட்டி வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் சூர்யா வெளியேறியதும் க்ரீத்தியும் படத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இது குறித்து அவர் மனம் திறந்து உள்ளார் படத்தில் கருத்து ரீதியாக சில வேறுபாடுகள் இருப்பதாகவும் படப்பிடிப்பு நாட்கள் அதிகமானதாலும் தான் படத்தைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி உடன் புதிய படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். எனவே அந்தப் படத்தின் மூலம் தான் அவர் தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார்.