உயிருடன் இருக்கும் குமார்.. மயக்கம் தெரிந்தவுடன் அவன் செய்த செயல்... அடுத்து நடந்த பரபரப்பு..! 

 
1

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமாரின் கை அசைவதை ராஜி பார்த்து விடுகிறாள். அனைவரையும் சத்தம் போட்டு அழைத்து கூப்பிட கோமதி, மீனா, அரசி ஆகியோரும் அவன் கை அசைவதை பார்த்து உயிர் இருப்பதை கன்பார்ம் பண்ணுகின்றனர். ஹாஸ்பிட்டல் அழைத்து போகலாம் என சொல்லும் போது, அவன் கண் முழிச்சு இங்க நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டா என்ன பண்றது என யோசிக்கின்றனர்.

இதனையடுத்து ராஜி கதிருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறாள். அப்போது தான் அவனுக்கு உயிரே வருகிறது. அவனும் ஹாஸ்பிட்டல் எல்லாம் கூட்டிட்டு போக வேணாம். நாங்க வந்ததுக்கு அப்பறம் என்ன பண்ணலாம் பார்க்கலாம். பக்கத்துல வந்துட்டோம் என சொல்கிறான் கதிர். செந்திலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறான். இதனிடையில் குமார் நிஜமாவே உயிரோட தான் இருக்கிறானா என்ற சந்தேகமும் கோமதி, மீனா, ராஜிக்கு வருகிறது.

அந்த நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு பயப்படுகின்றனர். தங்களோட சத்தம் கேட்டு யாராவது வந்து இருப்பாங்களா என பயத்தில் நிற்கின்றனர். அப்போது கதிர் போன் பண்ணி நாங்க வந்துட்டோம். கதவை திற என சொல்கிறான். இதனை தொடர்ந்து நிம்மதியுடன் கதவை திறக்க, கதிரை பார்த்ததும் அவன் கையை பிடித்து நாங்க ரொம்ப பயந்துட்டோம் என அழுகிறாள். செந்தில் வந்ததும் அவனை கட்டிப்பிடித்து மீனாவும் அழுகிறாள்.

அனைவருக்கும் சமாதானம் செய்துவிட்டு உள்ளே போய் பார்க்கின்றனர். அங்கு மயக்கத்தில் இருக்கும் குமாரை திரும்பி படுக்க வைத்து எழுப்புகின்றனர். அவனும் கண் விழித்ததும், எழுப்பி நிப்பாட்டி எதுக்குடா இங்க வந்த? உன்னை யாருடா இங்க வர சொன்னா? என கேட்கின்றனர். குமார் சுயநினைவுக்கு வந்து நான் சொல்றேன், சொல்றேன் என கூறிவிட்டு அனைவரும் அசந்த நேரத்தில் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கின்றனர். கதிரும், செந்திலும் விடாமல் துரத்தி வருகின்றனர்.

கடைசியில் குமார் ஒரு கார் பின்னாடி ஒளிந்து கொள்கிறான். இதனால் கதிர், செந்தில் அவனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வீட்டுக்கு வருகின்றனர். அங்கு அந்த குமார் நல்லாத்தான் இருக்கான். அவனுக்கு ஒன்னும் இல்லை என சொல்லி அனைவரையும் சமாதானப்படுத்துகின்றனர். அதன்பின்னர் செந்திலிடம் தனியாக பேசும் மீனா கதறி அழுகிறாள். ஒரு நிமிஷத்துல எல்லாமே முடிஞ்சுருச்சுன்னு நினைச்சேன் என புலம்புகிறாள். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web