மூச்சுபேச்சின்றி கிடக்கும் குமார் :கொலை பண்ணிட்டேன் என கதறி அழுகிறாள் மீனா..! 

 
1

 இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார் மூன்று பேரையும் கீழே தள்ளிவிடுகிறான். இதனால் மீனா ஒருக்கட்டத்தில் அரசியை காப்பாற்றுவதற்காக அருகில் இருக்கும் தோசை சட்டியை எடுத்து அவன் தலையில் பலமாக தாக்குகிறாள். இதனால் குமார் மயங்கி விழுகிறான். இதனையடுத்து ராஜி அவனை எழுப்ப முயற்சி செய்ய, குமார் சுயநினைவு இல்லாமல் இருக்கிறான். இதனால் கடும் அதிர்ச்சி அடைகிறாள்.

அண்ணனுக்கு பேச்சு, மூச்சே இல்லை அத்தை என சொல்கிறாள். அதனை தொடர்ந்து தண்ணீரை தொளித்து பார்க்கின்றனர். எவ்வளவு பண்ணியும் எழுந்திருக்க முடியவில்லை. அவன் இறந்து விட்டதாக சொல்லி அதிர்ச்சியில் உறைகின்றனர். மீனா கதறி அழுது, நான் வேணும்னு பண்ணலை அத்தை. அரசி கழுத்தை நெரிச்சான். அதான் காப்பாத்துறதுக்கு இப்படி பண்ணேன். நான் எதுவும் பண்ணலை என அழுகிறாள். ராஜியிடமும் மன்னிப்பு கேட்கிறாள்.

ஆனாலும் யாருக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. இந்தப்பக்கம் குமாருக்கு அவனுடைய அப்பா முத்துவேல் போன் பண்ணி கொண்டே இருக்கிறான். நேத்துல இருந்து ஆளை காணமே என மனைவியிடம் விசாரித்து பார்க்கிறான். அவளும் தனக்கு தெரியவில்லை. எங்காவது குடிச்சுட்டு படுத்து கிடப்பான் என சொல்கிறாள்.

இதனிடையில் கோமதி என் அண்ணன் பையை கொன்னுட்டியே மீனா என சொல்லி ஷாக் கொடுக்கிறாள். ஒரே ஒரு பையன் என் அண்ணனுக்கு. இதை வைச்சு என்னலாம் பிரச்சனை நடக்க போகுதோ. என் பொண்ணுக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். நீ எதுக்குடா இங்க வந்த. என் குடும்பமே போச்சே என கதறி அழுகிறாள். உடனே மீனா எனக்காக நம்ம குடும்பம் ஏன் கஷ்டப்படனும். நான் போலீசுக்கு போன் பண்றேன். நடந்த விஷயங்களை சொல்லி சரண் அடையுறேன் என்கிறாள்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அதெல்லாம் வேண்டாம் என கோமதி, ராஜி சொல்கின்றனர். அதன்பின்னர் கதிருக்கு போன் பண்ணி பேசுகிறாள் ராஜி. நடந்த விஷயங்களை சொல்லி அழுகிறாள். உடனே கதிர் நான் கிளம்பி வர்றேன். அவசரப்பட்டு எதுவும் பண்ண வேணாம் நீங்க என சொல்கிறான். அப்போது நீ வந்தால் தேவையில்லாம நீயும் இந்த பிரச்சனைல மாட்டிப்ப என சொல்கிறாள்.

அதற்கு கதிர் என்ன பேசுற நீ. என் அம்மா, தங்கச்சி, அண்ணி, பொண்டாட்டி எல்லாரும் ஒரு பிரச்சனைல இருக்கீங்க. அப்படி எல்லாம் உங்களை விட மாட்டேன். தைரியமா இருங்க என சொல்கிறான். இதனிடையில் ஜீவாவுக்கு போன் பண்ணி கதறி அழுகிறாள். நான் குமாரை கொன்னுட்டேன் என அவள் சொல்ல, அதிர்ச்சியில் உறைகிறான் ஜீவா. இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web