இறங்கி பார்த்துடலாம் என்கிறாள் பாக்கியா...சகட்டுமேனிக்கு திட்டி தீர்க்கும் ஈஸ்வரி..!

 
1

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி டோக்கன் அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு வர சொன்ன நிலையில், பாக்யா அட்வான்ஸ் பணத்தை கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுகிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத செல்வி ஆச்சரியப்படுகிறாள். நீ அட்வான்ஸ் கொடுக்கத்தான் வந்தியா அக்கா. ஒரு கை பார்த்துடலாம் இருக்க என கேட்கிறாள். அதற்கு பாக்யாவும் கடைசியா ஒரு தடவை இறங்கி பார்த்துடலாம் என கூறுகிறாள்...


இதனையடுத்து கடைக்கு பெயிண்ட் அடிப்பது, மற்ற பொருட்கள் வாங்குவது பற்றி பிளான் போடுகிறாள். இந்தப்பக்கம் கோபி வீட்டுக்கு வந்திருந்த நிலையில், பாக்யா கடை திறக்க போகும் விஷயம் பற்றி கேட்கிறான். ஈஸ்வரியும் அவக்கிட்ட டோக்கன் பணத்தை வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன் என்கிறாள். அந்த சமயத்தில் பாக்யா வர, பணத்தை வாங்கிட்டியா என கேட்கிறாள். அதற்கு அவள் எதுக்காக வாங்கனும். கடை வேணாம் நினைச்சா தான டோக்கன் பணத்தை வாங்கனும் என்கிறாள்.


இதனைக்கேட்டு ஷாக்காகும் ஈஸ்வரி வீட்டில் இருக்கும் செழியன், எழில் அனைவரையும் கீழே வர சொல்கிறாள். அதனை தொடர்ந்து இவ என்ன பண்றான்னு பாருங்க. உங்கம்மா ஹோட்டல் ஆரம்பிக்க போறாளாம் என சொல்கிறாள். அப்போது செழியன், எழில் இருவரும் வேண்டாம் என்கின்றனர். செழியன் நீ ஏன்ம்மா இப்படிலாம் பண்ணிட்டு இருக்க. உனக்கு கடைல ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வருமா. நான் அதுக்கு மேல பணம் தர்றேன் தான சொல்றேன் என்கிறான்.


எழிலும் கொஞ்சம் பெரிய கடையா பிடிச்சு ஹோட்டல் ஆரம்பிக்கலாம்மா. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு என சொல்கிறான். கோபியும் சொல்ல, பாக்யா கேட்பதாக இல்லை. அப்போது ஈஸ்வரி, இனியா குடும்பத்துல நீ இப்படி சின்ன ஹோட்டல் ஆரம்பிக்கிறதை பத்தி என்ன நினைப்பாங்க. இனியாவுக்கு இதுனால எவ்வளவு பிரச்சனை வரும் என சொல்கிறாள். மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினைச்சா, என்னால எதுவும் பண்ண முடியுமா போயிடும்.

என்னால வேலை செய்யாம காலம் முழுக்க இருக்க முடியாது. நீங்க என்மேல காட்டுற அக்கறை எனக்கு புரியுது. ஆனால் என்னை இந்த விஷயத்துல என்ன கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியில் கிளம்புகிறாள். உடனே ஈஸ்வரி, குடும்பத்தை தெருவுல நிக்க வைக்காம விட மாட்டா என சொல்கிறாள். அதனை தொடர்ந்து அவளிடம் பேசுவதற்கு கோபி கிளம்பி செல்கிறான். அதற்குள் கடையில் பெயிண்ட் அடிக்கும் வேலை ஆரம்பிக்க, பணத்தை மிச்சம் பண்ணுவதற்காக பாக்யாவும் இறங்கி பெயிண்ட் அடிக்கிறாள்.

இதனை பார்த்து கோபி பீல் பண்ணுகிறான். அதன்பின்னர் இரவு பாக்யா வீட்டில் இருக்கும் போது கோபி வந்து பேசுகிறான். நீ ஹோட்டல் திறக்குறதுல உறுதியா இருக்க. என்கிட்ட கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு. நான் கொடுத்து உதவி பண்றேன். வாங்கிக்கோ என கேட்கிறான். ஆனால் பாக்யா வேண்டாம் என சொல்லிவிடுகிறாள். ஹோட்டலுக்கு நீ பெயிண்ட் அடிக்கிறதை பார்த்தேன். ரெண்டு ரெஸ்டாரண்ட்ல உன்னை பார்த்துட்டு, இப்போ சின்ன கடையில் பார்க்கிறது கஷ்டமா இருக்கு என சொல்கிறான்.

இப்ப ஆரம்பிக்க போற ஹோட்டலுக்கு பணம் தேவைப்படும்ல. அதை தர்றேன். வாங்கிக்கோ என சொல்ல, பாக்யா அதெல்லாம் வேண்டாம். ஹோட்டல் திறக்கும் முடிவு குறித்து உறுதியாக சொல்கிறாள். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web