சிலந்தி வலையில் சிக்கியுள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ளும் இனியா..! 

 
1

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ஹோட்டலை துவங்கிய முதல் நாளில் கஸ்டமர் யாரும் வரவில்லை. இதனால் செல்வி என்னக்கா, கஷ்டப்பட்டு இன்னைக்கு கடையை திறந்தோம். யாரையும் காணோம் என வருத்தமாக கேட்கிறாள். அதற்கு பாக்யா, நம்ம கடை திறந்து இருக்கும்ன்னு தெரியாம இருந்து இருக்கோம். நாளைல இருந்து மறுபடியும் கஸ்டமர் வருவாங்க என நம்பிக்கையுடன் சொல்கிறாள்.

அந்த நேரத்தில் திடீரென கோபி அங்கு வருகிறான். காபி சாப்பிடனும் போல இருந்தது அதான் வந்தேன் என்கிறான். பாக்யா நம்பாமல் உண்மையை சொல்லுங்க எதுக்காக வந்தீங்க என கேட்கிறாள். உடனே கோபி, பல பிரச்சனைக்கு அப்பறம் கடை திறந்து இருக்க, ஏதாவது பிரச்சனை வரும் சொல்லித்தான் வந்தேன் என்கிறான். அதற்கு பாக்யா, என்னை நான் பார்த்துப்பேன். எல்லா பிரச்சனையையும் நான்தான் சமாளிச்சேன். எனக்கு யார் உதவியும் வேண்டாம் என்கிறாள்.


ஆனால் கோபி அவள் சொல்வதை எல்லாம் கேட்காமல் அங்கயே உட்கார்ந்து விடுகிறான். அப்போது கவுன்சிலர் மறுபடியும் அங்கு வருகிறான். என்ன மேடம் அமைச்சர் வரைக்கும் போய் உங்க பையனை காப்பாத்திட்டீங்க. ரொம்ப பெரிய ஆள் தான் கையை கொடுங்க என சொல்ல, கோபி கையை நீட்டுகிறான். அதனை தொடர்ந்து எங்க எல்லாருக்கும் பூரி கொடுங்க என்று கேட்க, அதெல்லாம் இல்லை என்கிறாள் பாக்யா.


கவுன்சிலர் செஞ்சு கொடுங்க மேடம் என கேட்க, பூரி சாப்பிட்டா பிபி பிரஷர் எல்லாம் வந்துடும். மேடம் இன்னைக்கு தான் கடை திறந்து இருக்காங்க. போயிட்டு நாளைக்கு வாங்க சார் என்கிறான். அப்போது கவுன்சிலர் ஆட்களும்,இப்போதான் அண்ணே பிரச்சனை முடிஞ்சு இருக்கு. வாங்க கிளம்பலாம் என்கிறான். இதனால் அவனும் போய்விடுகிறான். அதன்பின்னர் ஹோட்டல் அடைத்துவிட்டு போகும் போதும், பாக்யாவை பின்தொடர்ந்து கொண்டே போகிறான் கோபி.

இதனால் அவள் கடுப்பாகி எனக்கு இதெல்லாம் பிடிக்கலை என சொல்கிறாள். இது கவர்மெண்ட் ரோடு. யார் வேணாலும் வரலாம், போகலாம். எனக்கு உன் பாதுகாப்பு முக்கியம். நான் சும்மா பின்னாடி வர்றேன். நீ போ என்கிறான். அவளும் வேற வழியில்லாமல் கிளம்புகிறாள். வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி தனியாக ரூமில் உட்கார்ந்து இருக்க, பாக்யா அங்கு போய் கீழே படுக்கிறாள். உடனே ஈஸ்வரி, கொஞ்ச நாளா என்னை கண்டுக்கிறது இல்லன்னு குற்றவுணர்ச்சில இங்க வந்து படுக்குறியா என கேட்கிறாள்.

அதன்பின்னர் நீ ஹோட்டல் ஆரம்பிச்சதுல இருந்துதான் பிரச்சனையே ஆரம்பிச்சுச்சு. கண்டிப்பா இந்த ஹோட்டல் வேணுமா பாக்யா என கேட்கிறாள் ஈஸ்வரி. அதற்கு அவள், இனிமே அந்த ஹோட்டலால் வீட்ல உள்ளவங்களுக்கு பிரச்சனை வராது என சொல்கிறாள். மறுநாள் சுதாகர் ஆபீஸ் கிளம்பும் போது, அவனை நிப்பாட்டி பேசுகிறாள் இனியா. நான் ரெஸ்டாரண்ட்டை மேனேஜ்மெண்ட் பண்றேன். எனக்கு வீட்ல இருக்க போர் அடிக்குது என கேட்கிறாள்.

ஆனால் சுதாகர் அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுகிறான். இனியா விடாமல் கேட்க, நிதிஷ் கோபத்தில் கத்துகிறான். அப்பா ஒரு தடவை சொன்னா கேளு. அதை விட்டுட்டு சும்மா எதிர்த்து பேசிட்டு இருக்காத என்கிறான். அதன்பின்னர் உன் அம்மாக்கிட்ட பேசி ஹோட்டலை மூட சொல்லு. போர் அடிக்குதுன்னு சொன்னில. இந்த வேலையை பாரு என சொல்லி ஷாக் கொடுக்கிறான்.

சுதாகரின் உண்மையான முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்து அதிர்ச்சி அடைகிறாள் சுதாகர். அவர்கள் இருவரும் போன பிறகு, நிதிஷின் அம்மா நீ பண்றது எதுவும் சரியில்லை எனக்கூறி அவளும் திட்டுகிறாள். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் மேற்கூறிய சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளது.

From Around the web