மனம் திறந்து பேசிய மாரி செல்வராஜ்... பரியேறும் பெருமாள் படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது அதர்வா தான்

இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரியேறும் பெருமாள் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இப்படத்தில் கதிர் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாக பரியேறும் பெருமாள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இப்படம் தொடர்பாக 'டிஎன்ஏ' பட விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியுள்ளார்.
இதனால் பரியேறும் பெருமாள் படத்துக்கு அவர் தேதி ஒதுக்க முடியாத காரணத்தால் வருத்தப்பட்டேன். அதன்பின்னர் ஏழு வருடங்கள் கழித்து தற்போது தான் அவரை பார்க்கிறேன். டிஎன்ஏ படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். இன்னும் பல உயரங்களுக்கு அவர் செல்வார் என தெரிவித்துள்ளார். மேலும் நிமிஷா சஜயன் குறித்து பேசிய மாரி செல்வராஜ், இயல்பான தோற்றம் கொண்ட அவர் என் பட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருப்பார் என என்னுடைய உதவியாளர்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
இதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்காதது குறித்து அதர்வா பேசும் போது, தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் படமும் ஒன்று. இந்தப்படத்தின் வாய்ப்போ மின் பண்ணியதால் எதையும் இழக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அற்புதமாக தனது கதாபாத்திரத்தை பண்ணி இருந்தார் கதிர். வேறு ஏதேனும் கதை இருந்தால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் அதர்வா .
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் 'டிஎன்ஏ' உருவாகியுள்ளது. இப்படத்தில் அதர்வாவுடன் நிமிஷா சஜயன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தது. டிஎன்ஏ படம் வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.
டிஎன்ஏ படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள அதர்வா, அடுத்ததாக இதயம் முரளி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் அதர்வாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.