அடுத்ததாக சூர்யாவுடன் இணையும் மாரி செல்வராஜ்..!

 
அடுத்ததாக சூர்யாவுடன் இணையும் மாரி செல்வராஜ்..!

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். அதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்ணன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணு, சூர்யா - மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். அதை தொடர்ந்து சூர்யாவுடன் அவர் இணையும் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என தகவல்கள் கூறுகின்றன. 

From Around the web