அரசியை சந்திக்க முடிவு செய்கிறாள் மீனா..! அரசியின் கல்யாணம் பற்றிய உண்மை வெளிவருமா ?

 
1

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாடகத்தில் அப்பாவை நினைத்து அனைவரும் வேதனையில் இருக்கின்றனர். இதுப்பற்றி ராஜியிடம் பேசும் கதிர், அப்பா குடிக்கிறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. மீனா அண்ணி வீட்டுக்கு வந்ததில் இருந்தே அப்பா குடிக்கிறதே இல்லை. இன்னைக்கு அவரோட நிலைமையை பார்க்கும் பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு. அரசிக்கிட்ட என்ன சொல்லி அந்த குமார் மனசை கெடுத்தான் தெரியலை.

அரசியை எதுவும் டார்ச்சர் பண்ண மாட்டான்ல குமார். அவன் ஏதாவது பண்ணான் வெட்டி கொன்னுடுவேன் என ஆத்திரமாக சொல்கிறான். உடனே ராஜி, அதெல்லாம் நீ கவலைப்படாத. பாட்டி, அம்மா, சித்தி அப்படியே விட்டுட மாட்டாங்க என்கிறாள். இந்தப்பக்கம் கோமதி சாப்பிடாமலே உட்கார்ந்து இருப்பதால், அவளை சாப்பிட சொல்லி கொடுக்கிறாள் மீனா. ஆனால் வேண்டாம் என்கிறாள் கோமதி. அப்போது செந்தில் வந்து ஊட்டி விடுகிறான்.

அரசி இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லைடா. அம்பாசமுத்திரத்துக்கும் இவ சொல்லித்தான் வந்து இருப்பான் போல என சொல்கிறாள்.

மறுநாள் பாண்டியன் யார் சொல்லியும் கேட்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.அதனை தொடர்ந்து பழனியை வீட்டை பார்த்துக்க சொல்லிவிட்டு செந்தில், கதிர் இருவரும் அவன் பின்னாடி கடைக்கு கிளம்புகிறான். இந்தப்பக்கம் கோமதி எனக்கு பசிக்குது. போய் சமைக்கிற வேலையை பாருங்க. ஓடி போனவளை நினைச்சும், இந்த வீட்ல இருக்குறங்களை நினைச்சும் அழுறதுக்கு சக்தி வேணும் என சொல்கிறாள்.

அப்போது பழனியிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அழைத்து போகிறாள் மீனா. எனக்கு அரசிக்கிட்ட தனியா பேசனும் என சொல்கிறாள். உடனே பழனி எதுக்கும்மா? அரசி பெயரையே சொல்லாத. எனக்கு ஆத்திரமா இருக்கு என்கிறான். ஆனால் மீனா, எனக்கு இந்த கல்யாணத்துல நிறைய சந்தேகம் இருக்கு மாமா. எனக்கு அரசியை நேர்ல பார்த்து பேசுனா தான் என்ன நடந்ததுன்னு தெரியும். எப்படியாவது பேசுறதுக்கு உதவி பண்ணுங்க என சொல்கிறாள்.

இந்தப்பக்கம் அரசி குளித்து கொண்டிருக்கும் போது, அவள் தன்னை மிரட்டிய கத்தியை எடுக்கிறான் குமார். அவள் வெளியில் வந்ததும், இந்த கத்தியை காட்டி தான என்னை மிரட்டுன. இதுக்கப்புறம் என்ன பண்ண போற. என்னை ரொம்ப சாதாரணமா நினைச்சுக்கிட்டீல என திமிராக பேசுகிறான். இதோடு எபிசொட் நிறைவடைகிறது 

From Around the web