மீனா கொடுத்த தரமான பதிலடி.. அசிங்கப்பட்ட ரோகிணி.!

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்டில் மீனாவிடம் இருந்து திருட்டு பசங்க பணத்தை அடிச்ச விஷயத்தை சொன்ன அண்ணாமலை உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா என்று அண்ணாமலை கேட்க, கொடுத்து இருக்கோம்பா என்கிறான் முத்து. தங்கச்சி சீட்டு போட்டு வச்சிருந்த பணமும், அவள் பிரண்டு கிட்ட கடனா வாங்கின பணமும் போயிடுச்சு மாமா என கதறி அழுகிறாள் மீனா.

அதனை தொடர்ந்து விஜயாவிடம் உன்னோட நகையே குடு. அவுங்க கடன் வாங்கி கொடுத்திருக்காங்க என்று சொல்கிறார் அண்ணாமலை. ஆனால் விஜயா திமிர் பிடிச்சு போய், அந்த சிந்தாமணிக்கு போட்டியா பெரிய ஆளாகணும்னு பேராசை பட்டா. அதுக்கு நான் எதுக்கு என்னோட நகையை கொடுக்கணும் என கேட்கிறாள். உடனே மீனா, எனக்கு ஒன்னும் எந்த பேராசையும் கிடையாது. எனக்கு வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கணும் நினைச்சேன். அவ்வளவு தான் என ஆவேசமாக சொல்கிறாள்.

உடனே அண்ணாமலை மீனா நகை இருந்திருந்தா, அவள் அதை வைச்சு சமாளிச்சு இருப்பாள். ஆனால் அந்த நகையை நீயும், மனோஜும் என்ன பண்ணீங்கன்னு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் என்கிறார். ஆனாலும் விஜயா நகையே கொடுக்க முடியாது என உறுதியாக சொல்கிறாள். அந்த சமயத்தில் ரோகிணியும் ஆண்ட்டிக்கு சப்போர்ட்டாக பேசி வர்ற, நான் யார்கிட்டயும் பொய் சொல்லை. ஏமாத்தலை. நகையை வைத்து பொய்யான நகையை எடுத்துட்டு வந்து வைக்கல என்கிறாள்.

இதனைக்கேட்டு ரோகிணி கடுப்பாகி முறைக்கிறாள். அதன்பின்னர் முத்து, மீனா எங்களுக்கு எந்த நகையும் வேணாம். நாங்க எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கடனை அடைச்சுருவோம் என சொல்கின்றனர். அதன்பின்னர் மீனாவின் அம்மா, தங்கச்சி, தம்பி மூவரும் அவளை பார்ப்பதற்காக வருகின்றனர். விஜயா அவர்களை பார்த்து எப்பவும் போல எகத்தாளமாக பேச, அண்ணாமலை உட்கார வைத்து பேசுகிறார். சீதாவிடம் பணம் போச்சு என அழுகிறாள் மீனா.

அதற்கு அவள் பரவாயில்லைக்கா விடு என சமாதானம் சொல்கிறாள். அந்த சமயத்தில் முத்து வந்து மீனா எந்த மண்டபத்துக்கு ஆர்டர் எடுக்க போனாள் உள்ளிட்ட விவரங்களை வாங்கி கொண்டு கிளம்புகிறான். இதனையடுத்து மீனாவுக்கு கையில் அடிப்பட்டு இருப்பதால் விஜயாவை சமைக்க சொல்கிறார் அண்ணாமலை. இதனால் அவள் வெறுப்புடன் சமைக்கிறாள்.


இதனிடையில் மனோஜுக்கு இரவெல்லாம் உடம்பு சரியில்லாத காரணத்தால், பகலில் அவனை பார்க்க கடைக்கு கிளம்பி வருகிறாள் ரோகிணி. அங்கு அவன் நீ எதுக்கு வந்த? அம்மாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க என அம்மா புராணத்தை பாட ஆரம்பிக்கிறான். இதனையடுத்து ரோகிணி கடுப்பாகி அங்கிருந்து போகிறாள். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web