அதிர்ச்சியில் திரையுலகம்..!!  ஷங்கர் படத்தில் நடிக்க சம்பளமாக ராம்சரணுக்கு ரூ.100 கோடி ?
 

 
1

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ராம்சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன்.

தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாராகிறது. கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க கூடாது என்று பட நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றும் இந்த படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

ராம்சரண் ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு புனேயில் நடந்தது. ராம்சரண், கியாரா அத்வானி பங்கேற்று நடித்தனர். அங்கு பாடல் காட்சியையும் படமாக்கினர்.

இந்தப் படத்தில் நடிக்க சம்பளமாக ராம்சரண், ரூ.100 கோடி வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் பிரபாசுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகராக ராம்சரண் உயர்ந்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் ராம் சரண் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

From Around the web