Mr. And Mrs சின்னத்திரையை விட்டு வெளியேறிய ஜோடி- காரணம் இதுதான்..!

 
மணிகண்டன் மற்றும் சோஃபியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பிரபலமான ஜோடி வெளியேறியது குறித்த விபரம் தெரியவந்துள்ளது.

வார இறுதி நாட்களில் ஒளிப்பரப்பாகும் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பார்வையாளர் கூட்டம் உண்டு. கடந்த இரண்டு வாரங்களுக்கு இணையாக புதிய சீசன் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் போது மொத்தம் 12 ஜோடிகள் இருந்தனர். இதுவரை எலிமினேஷன் மூலம் 3 நட்சத்திர தம்பதிகள் வெளியேறியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷின் உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன் தனது மனைவி சோஃபியாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் வரவில்லை. கடந்த இரண்டு வார நிகழ்ச்சிகளில் இவர்களை பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கேட்டுக்கொண்டெ இருந்தனர். நிகழ்ச்சிக்குழுவும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகை சோஃபியா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் தன்னுடைய உடல்நிலை நலிவடைந்துவிடதால் நிகழ்ச்சியில் தொடர முடியவில்லை. நிச்சயம் கணவர் மணிகண்டனுடன் சேர்ந்து வைல்டு கார்டு சுற்றில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

From Around the web