ரோகிணியை காப்பாற்ற துடிக்கும் முத்து மீனா.. மீண்டும் குத்திக்காட்டி பேசும் ரோகிணி..! 

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் தங்களுக்கு கிடைத்த பணத்தை மீனாவிடம் கொடுக்கின்றனர். அவள் வேண்டாமென சொல்ல, வாங்கிகோங்க என வற்புறுத்துகின்றனர். அண்ணாமலையும் உன்னால அவுங்களுக்கு நல்ல பெயர் கிடைச்சு இருக்கு. அந்த சந்தோஷத்துல உங்களுக்கு கொடுக்குறாங்க. வாங்கிகோங்க என சொல்கிறார். இதனையடுத்து மீனாவும் பணத்தை வாங்கி முத்துவிடம் கொடுக்கிறாள்.

அப்போது ஸ்ருதி நீங்க சாப்பாடு பிசினஸ் கூட பண்ணலாம் மீனா என சொல்கிறாள். அதற்கு மனோஜ், இதெல்லாம் பிசினஸ் கிடையாது. நான் பண்றது தான் பிசினஸ் என கிண்டலடிக்கிறான். உடனே சம்பந்தமே இல்லாமல் விஜயா, இவளாவது பூக்கட்டி சம்பாதிக்கிறாங்க. ஆனால் சிலர் எல்லாம் தெண்டத்துக்கு இருக்காங்க என ரோகிணியை குத்தலாக பேசுகிறாள். அதற்கு அவள் நானும் கஷ்டப்பட்டு நல்லா சம்பாரிப்பேன் என்கிறாள்.


அதற்கு விஜயா கிழிப்ப. என்னன்ன சொல்லி ஏமாத்துன. உன் அப்பா அக்கவுண்ட்ல எவ்வளவு பணம் இருக்குன்னு சொன்ன. முன்னூறு கோடின்னு தான சொன்ன என கேட்டு அசிங்கப்படுத்துகிறாள். இதனையடுத்து மாடியில் உட்கார்ந்து முத்து, மனோஜ், ரவி குடிக்கின்றனர். அப்போது மனோஜ், உனக்கு பணம் கிடைச்சா அதை தனியா வந்து கொடுக்க வேண்டியது தான. உன்னால அம்மா ரோகிணியை திட்டி, ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு கஷ்டமா இருக்குடா என புலம்புகிறான்.

அவனிடம் நீதான் அம்மாக்கிட்ட பேசனும். இப்படி அமைதியாவே இருந்த ஒண்ணுமே மாற போறது இல்லை என முத்து, ரவி அட்வைஸ் பண்ணுகின்றனர். மறுபக்கம் ஸ்ருதி, மீனா பேசிக்கொண்டு இருக்கும் போது ரோகிணி வருகிறாள். அப்போது விஜயா மனசை எப்படி மாத்துறது என பேசுகின்றனர். அதற்கு மீனா ஏற்கனவே பார்வதி ஆண்ட்டிகிட்ட பேச சொன்னேன் என்கிறாள். அதற்கு ஸ்ருதி எனக்கு தெரிஞ்சு அவங்க சொன்னா எல்லாம் ஆன்ட்டி கேட்கிற மாதிரி தெரியலை.


மாமா சொல்லியே கேட்கலை என்கிறாள். இதனையடுத்து ஒரு ஐடியா பண்ணும் ஸ்ருதி, ஒரு ஜோசியரை வைச்சு ரோகிணியை பத்தி பாசிட்டிவா பேச சொல்லுவோம் என்கிறாள். ஆனால் ரோகிணி அதெல்லாம் வேண்டாம். இந்த வீட்ல என்னை பத்தி போட்டு கொடுக்கவே சிலர் இருக்காங்க என குத்தலாக பேசுகிறாள். உடனே மீனா டென்ஷனாகி யாரா சொல்றீங்க. எங்களுக்கு யாரை பத்தியும் போட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என சொல்கிறாள்.


அதற்கு ரோகிணி நீங்க பிரவுன் மணியை பார்த்தா என்கிட்ட வந்து மொத கேட்க வேண்டியது தான என்கிறாள். உடனே மீனா எங்களால அத்தை, மாமாவை ஏமாத்த முடியாது. பொய் சொல்லி ஒரு விஷயத்தை அடைஞ்சா, ஒருநாள் மாட்டிக்கிற சூழ்நிலை வரத்தான் செய்யும் என வெளுத்து வாங்குகிறாள். ஸ்ருதியும், ஆமாம் ரோகிணி. நானும் ரவியும் பிரவுன் மணியை பார்த்து இருந்தா, வீட்டுக்கு தான் கூட்டிட்டு வருவோம் என சொல்கிறாள்.

அப்போது மீனாவும் மண்டபத்துல ஏற்கனவே அவர் மாமா, அத்தை கண்ணுல மாட்ட வேண்டியவரு. இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் உண்மை தெரிஞ்சு தான் ஆகியிருக்கும் என சொல்லி ஷாக் கொடுக்கிறாள். இதனால் ரோகிணி கடுப்பாகி அங்கிருந்து போகிறாள். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web