மாளவிகா என பெயர் வைத்ததினால் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் பெரிய சண்டை ஆயிடுச்சு - சுந்தர் சி..!
சுந்தர் சி தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் விமல், மிர்ச்சி சிவா, ஹிப்பாப் ஆதி ஆகியோர் வீடியோ மூலமாக சுந்தர் சி யிடம் கேள்விக்கணைகளை தொடுத்தனர். அதில் நடிகை மாளவிகா, என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சுந்தர் .சி சார் தான். என்னுடைய பெயரை மாளவிகா என மாற்றியதும் அவர்தான். சினிமாவில் அறிமுகப்படுத்துனதுல சுந்தர் .சி சாருக்கு பேவரிட் யார் எனக் கேட்டதும் மாளவிகா என்று பெயர் வைத்ததினால் எனக்கும் என்னுடைய மனைவி குஷ்பூவுக்கும் பெரிய சண்டை ஆயிடுச்சு.
ஏன்னா குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசித்து என்னுடைய மனைவி மாளவிகா என்ற பெயரைத் தான் தேர்வு செய்து வைத்திருந்தார். நானும் சூப்பரா இருக்குன்னு சொல்லியிருந்தேன். தேவா சார் கூட கம்போசிங்கில் இருந்த போது ஹீரோயின் பேரில் பாட்டு இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாரு. வெவ்வேறு பேர்ல பாட்டு சொல்லியும் செட் ஆகல. வேறு ஏதாவது ஒரு நல்ல பெயர் தான் சொல்லுங்க எனக் கேட்டதும் எனக்கு மாளவிகான்னு தான் வந்தது . சொல்லிட்டேன். அதிலேயே அவர் பாட்டும் பாடி முடிக்க எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சு. பாட்டுல அந்த பெயர் வரவும் ஹீரோயினுக்கும் அதே பெயரை வச்சிட்டோம் . இப்படி மாளவிகா பெயரால் தனக்கும் மனைவிக்கும் இடையில் நடந்த சண்டையை பகிர்ந்து கொண்டார்.
அவரது ரசிகர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ச்சி அடைந்தனர். சரியாக நடக்க கூட தெரியாமல் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் வந்தவர் மாளவிகா. டான்ஸ் எல்லாம் அவருக்கு சுத்தமா ஆட தெரியாது. ஆனால் பின்னால் அவர் பெரிய டான்ஸர் ஆகிட்டாங்க. ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிச்சாங்க. நடந்து வரும்போது நான் பூ போடுவேன். மாளவிகா கிட்ட அப்ப நான் சொன்னேன். உன்னை அறிமுகப்படுத்தின பாவத்துக்கு நான் என்னென்ன பண்றேன் பாருன்னு சொன்னேன். மற்றபடி மாளவிகா ரொம்ப வெகுளியான, தங்கமான பொண்ணு தான். நான் அறிமுகம் செய்ததிலேயே எனக்கு பிடிச்ச ஹீரோயின் நீங்கதான் எனக் கூறினார்.