செழியனை காப்பாற்ற சென்று அமைச்சர் வீட்டில் சமைக்க ஆரம்பிக்கும் பாக்கியா..!

 
1

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் அமைச்சர் மூலமாக கவுன்சிலருக்கு அழுத்தம் கொடுக்க பிளான் பண்ணுகிறாள் பாக்யா. இதற்காக அதே கட்சியில் உள்ள ஆளிடம் உதவி கேட்கிறாள். ஏற்கனவே கவுன்சிலருடன் மோதலில் இருக்கும் அவன் பாக்யாவுக்கு உதவுவதாக கூறுகிறான். அமைச்சர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அனைவரும் கூடி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஃப்ரியாக இருக்கும் போது பாக்யாவை பேச வைப்பதாக கூறி இருக்கிறார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் கவுன்சிலர் பாக்யாவை அங்கு பார்த்து கோபப்படுகிறான். நீ எதுக்காக இங்க நிக்கிற. மொத கிளம்பும்மா என சத்தம் போடுகிறான். உன் பையன் வெளிய வர்றது எல்லாம் நடக்கிற காரியம் கிடையாது. யார் சொன்னாலும் அவன் மேல கொடுத்து இருக்கிற கேஸை வாபஸ் வாங்க மாட்டேன். காலம் முழுக்க உன் பையன் ஜெயில்ல தான் இருப்பான் என சொல்கிறான். அப்போது அனைவரும் சேர்ந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.
 

அதன்பின்னர் பாக்யாவை உள்ளே அழைத்து வெயிட் பண்ண சொல்கிறான் கட்சி ஆள். அந்த சமயத்தில் அமைச்சர் பிறந்தநாளுக்காக சமையல் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதை ஒருத்தர் வந்து சாப்பிட்டு பார்க்கிறார். அப்போது சாப்பாடு எதுவுமே சரியில்லை என சத்தம் போடுகிறார். பாக்யாவுக்கு உதவுவதாக சொல்லி இருந்த ஆள்தான் சாப்பாடு ரெடி பண்ணி இருக்கிறார். ஆனால் அது எதுவும் சரியில்லை என அவரிடம் சத்தம் போடுகிறார்கள்.

அமைச்சருக்கு தெரிந்தால் கோபப்படுவார் என கூறுகின்றனர். அந்த சமயத்தில் பாக்யா தானாக வந்து எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என கேட்கிறாள். அப்போது அங்கிருப்பவர்கள் நீங்க சின்ன அளவுல ஹோட்டல் வைச்சு சமைச்ச ஆள். இங்க இத்தனை பேருக்கு எப்படி சமைக்க போறீங்க என கேட்கிறார்கள். அதற்கு பாக்யா, நான் இதுக்கு முன்னாடி ரெண்டு ரெஸ்டாரண்ட் வைச்சு நடத்தி இருக்கேன். நிறைய சமையல் ஆர்டர் எடுத்து பண்ணி இருக்கேன் என்கிறாள்.

அதோடு எம்எல்ஏ வீட்டு பங்ஷனில் 5000 பேருக்கு சமைத்ததை பற்றியும் சொல்கிறாள். இதனையடுத்து அவளையே சமைக்குமாறு அனைவரும் கூறுகின்றனர். அப்போது அவளை அங்கு அழைத்து வந்த கட்சி ஆளும், நீங்க மட்டும் நல்லா சமைங்க. அமைச்சரே உங்களை கூப்பிட்டு பேசுவாரு. அப்போ உங்களோட பிரச்சனை எல்லாத்தையும் சொல்லலாம் என்கிறார்.

இதனையடுத்து செல்வியை வைத்து சமையல் வேலைகளை ஆரம்பிக்கிறாள் பாக்யா. அப்போது அந்த கவுன்சிலர் அங்கு வந்து பார்த்து ஷாக் ஆகிறான். இங்க வேற ஆள்தான சமைச்சுட்டு இருந்தாங்க. நீ எதுக்காக இங்க வந்த என சத்தம் போடுகிறான். அப்போது மற்றொரு ஆள் வந்து இவுங்க தான் சமைக்குறாங்க. உனக்கு என்ன பிரச்சனை என்கிறான். அதன்பின்னர் கவுன்சிலர் நீ மட்டும் அமைச்சர் கிட்ட என்னை பத்தி ஏதாவது சொன்ன அவ்வளவு தான்.

உன் பையனை ஜெயிலுக்கு அனுப்புன என்னால் உன்னோட கதையை முடிக்கிறது பெரிய விஷயம் கிடையாது என்கிறான். அதையெல்லாம் கண்டுக்காமல் சமைத்து முடிக்கிறாள் பாக்யா. அப்போது ஈஸ்வரி போன் பண்ணி எங்க இருக்க என கேட்க, நான் ஒரு சமையல்ல இருக்கேன் என்கிறாள். இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி, சுயநினைவோட தான் பேசிட்டு இருக்கியா என கேட்கிறாள். பாக்யா அப்பறமா வந்து விளக்கமா சொல்றேன் என கூறிவிட்டு போனை வைக்கிறாள். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

From Around the web