பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சூப்பர் ஸ்டோரி..! அன்று கம்பெனி ஓனர், இன்று சீரியல் நடிகர்..!

 
1

சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மருமகள் ஆகிய தொடர்கள் மூலம் பிரபலமானவர் ரவிச்சந்திரன். மருமகள் சீரியலுக்காக ரவிச்சந்திரனுக்கு விருது கிடைத்தது.

அவர் ஆரம்பத்தில் இருந்தே நடிகர் இல்லை. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சொந்த ஊரில் இருக்க முடியாமல் போன சூழல் வரவே வேலை தேடி சென்னைக்கு வந்தவர் நடிகராகிவிட்டார். அவர் தான் ஒரு நடிகன் ஆன கதையை அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ரவிச்சந்திரன் குடும்பத்தாருக்கும், நடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சொந்த ஊரில் மசாலா கம்பெனி வைத்து நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கம்பெனி நஷ்டமாகிவிடவே அதை மூடிவிட்டார். அதை பார்த்து ஊரில் ஆளாளுக்கு பலவிதமாக பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

சொந்த ஊரில் பெரிய அவமானம் ஏற்படவே வேறு வழியில்லாமல் வேலை தேடி சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார் ரவிச்சந்திரன். சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, சரி முயற்சி செய்யலாம் என ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படித் தான் மசாலா கம்பெனி உரிமையாளரான ரவிச்சந்திரன் நடிகராகியிருக்கிறார்.


நடிகரான பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. தனக்கு பழக்கமே இல்லாத தொழிலாக இருந்தாலும் ஆர்வத்துடன் நடித்து இன்று விருது வாங்கும் அளவுக்கு தேறிவிட்டார்.


மசாலா கம்பெனி நஷ்டமானதும் எந்த ஊர் தரக்குறைவாக பேசியதோ அதே ஊர் முன்பு பெயரும், புகழும் பெற்றுவிட்டார். இதையடுத்து ரவிச்சந்திரன் எங்க ஊர்க்காரர் என மக்கள் பெருமையாக பேசுகிறார்கள். அதை பார்த்து சந்தோஷப்படுகிறார் ரவிச்சந்திரன்.


நடிக்க வந்து பெயரும், புகழும் கிடைத்தபோதிலும் தன் நடிப்புக்காக ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்கிற கவலை அவருக்கு இருந்து வந்தது. தற்போது அந்த கவலையும் தீர்ந்துவிட்டது. மருமகள் சீரியலுக்காக கிடைத்த விருது தான் ரவிச்சந்திரன் வாங்கியிருக்கும் முதல் விருது ஆகும்.


ரவிச்சந்திரனின் கதையை கேட்டவர்களோ, கடவுள் காட்டிய பாதையில் அவர் சென்று கொண்டிருக்கிறார். எனக்கு மசாலா வியாபாரம் தான் தெரியும் என நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?. கடவுள் கொடுக்கும் வாய்ப்பை ஏற்றால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை ஒரு உதாரணம் என்கிறார்கள்.

From Around the web