ராஜியின் வீடியோவை பார்த்து கொந்தளித்த பாண்டியன்.. உங்க பையனுக்காக தான் எல்லாம்... நம்புவாரா பாண்டியன்..?

 
11

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் நான் மாமாக்கிட்ட பேசி சமாளிச்சுக்கிறேன். நீங்க அமைதியா இருங்க நேரம் பார்த்து பேசிக்கிறேன் என சொல்கிறாள். அப்போது குமார் பத்தியும் அப்பாக்கிட்ட சொல்லணும்ல என கேட்கும் போது, அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம். கல்யாணத்தை வைச்சுக்கிட்டு தேவையில்லாத பிரச்சனை எதுக்கு? கல்யாணம் நல்லபடியா முடியட்டும் என சொல்கிறாள்.

அதற்கு கதிர் அப்போ அப்படியே விட்டுட சொல்றீயாம்மா என கேட்கிறான். கண்டிப்பா ஏதாவது பண்ணிதான் ஆகனும். அதை கல்யானத்த்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம் என சொல்கிறாள் கோமதி. இதனையடுத்து செந்தில் காரை ஓட்ட போக, நான் முன்னாடி சீட்டுக்கு வர்றேன் என்கிறாள் மீனா. அதற்கு கோமதி, ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து தான் வருவீங்களோ. நீ இங்க வந்து தூங்கிருவடி. நான் இங்க இருந்தால், என் பையன் கிட்ட பேசிட்டே வந்துடுவேன் என சொல்கிறாள்.

இதனிடையில் வீட்டில் சுகன்யா வீட்டில் உள்ளவர்களை சத்தம் போட்டு ஹாலுக்கு வர சொல்கிறாள். பழனி பயத்துடன், இன்னைக்கு என்ன பிரச்சனை கொண்டு வந்து இருக்காளோ என யோசிக்கிறான். அப்போது சுகன்யா அம்பாசமுத்திரம் திருவிழால இருந்து வீடியோ வந்து இருக்கு என்று சொல்லி போனை காட்டுகிறாள். அதில், டான்ஸ் போட்டியில் ராஜி ஆடி இருக்கும் காட்சிகள் இருக்கிறது. அதனை பார்த்து பாண்டியன் ஷாக் ஆகிறான்.

சரவணன், மயில், பழனியும் பார்த்து இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என பயப்படுகின்றனர். வீட்டில் நடக்கும் களேபரங்கள் எதுவும் தெரியாமல் கூலாக அம்பாசமுத்திரத்தில் இருந்து அனைவரும் வருகின்றனர். கோமதி நார்மலாக பேச, பாண்டியன் வீடியோவை பார்த்து முறைத்து கொண்டே இருக்கிறான். கதிர் நடப்பதை புரிந்து கொண்டு, உன் டான்ஸ் வீடியோ சோஷியல் மீடியால வந்துடுச்சு போல என சொல்கிறான். மீனாவும் பக்கத்தில் போய் பார்த்து ஷாக் ஆகிறான்.

அதனை தொடர்ந்து பாண்டியன் கடுப்பாகி கோயிலுக்கு சாமி கும்பிட போன இடத்துல என்ன பண்ணிட்டு வந்தது இருக்கீங்க என வீடியோவை காட்டுகிறான். உடனே கோமதி, நானும் எவ்வளவோ சொன்னேங்க. இவதான் கேட்கவே இல்லை என பிளேட்டை மாற்றுகிறாள். கதிர் அவளுக்கு சப்போர்ட்டாக பேச ஆரம்பிக்க, அவனை அமைதியா இருக்க சொல்லு கோமதி. நான் செம்ம கோவத்துல இருக்கேன் என கொந்தளிக்கிறான் பாண்டியன்.


அப்போது மீனா களத்தில் இறங்கி, நீங்க தான மாமா எங்க நம்ம திறமையை காட்டுற இடம் கிடைச்சாலும் காட்டனும் சொல்லி இருக்கீங்கள்ள. அதைத்தான் ராஜி செஞ்சா மாமா என்கிறாள். அதோடு பைக் பரிசாக கிடைத்த விஷயத்தையும் கூறி, ராஜியை போய் பாண்டியனின் காலில் விழுக்க சொல்லி சிக்னல் கொடுக்கிறாள். அதே மாதிரி ராஜியும் காலில் விழ, ஒரு வழியாக பிரச்சனை முடிகிறது.

அதனை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்து சொல்ல, பழனி வண்டி எங்கே என கேட்கிறான். நாளைக்கு வந்துடும் என்கிறான்.

From Around the web