அறிவிக்கப்பட்ட தேதியை கடந்து ரிலீசாகும் பிரபாஸ் படங்கள்..!
 

 
சாலார் திரைப்படம்
கொரோனா காரணமாக பட உருவாக்க பணிகள் தாமதமாகி வருவதால் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் ரிலீஸ் மேலும் தாமதமாகிறது.

பாகுபலி என்கிற படத்தை தொடர்ந்து பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பாகுபலி படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வெளியான ‘சஹோ’ மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதனால் தன்னுடைய அடுத்த படங்களை மிகவும் உன்னிப்பாக அவர் தேர்வு செய்துள்ளார்.

அந்த வகையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படம் பிரபாஸ் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள படம். வரலாற்றுக் கால பின்னணியில் உருவான காதல் கதையாக இப்படம் தயாராகியுள்ளது. இந்தாண்டு டிசம்பரில் இப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் 2022 பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாலார்’ படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதில் ஸ்ருதி ஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழு தயாராக இருந்தது. ஆனால் கொரோனாவால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்க முடியாமல் போயின. இதன் காரணமாக சாலார் படத்தின் வெளியீடும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் முறையில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ரிலைமையும் இதேதான். அதனால் இந்த மூன்று படத்தின் படப்பிடிப்பிலும் மாறிமாறி நடித்து வருகிறார் பிரபாஸ். தற்போது சலார் படத்தை 2022 ஜூன் மாதத்திலும், ஆதிபுரூஷ் படத்தை 2023 ம் ஆண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web