இரண்டாவது முறையாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்..!

 
பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ்

கே.ஜி.எஃப் பட இயக்குநர் இயக்கி வரும் சாலார் படத்தில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், மீண்டும் அவருடைய இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் தயாரான ‘கே.ஜி.எஃப்’ படம் தேசியளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் ஒரே படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கி முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக அந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் சாலார் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றார். இதற்கான படப்பிடிப்பு கொரோனா காலக்கட்டத்துக்கு இடையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபாஸ் நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிப்பார் என்று தெரிகிறது. அதற்குள் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்கி முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.
 

From Around the web