சீதா காதலால் முத்து மீனா இடையே கிளம்பும் பிரச்சனை..!

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் சீதாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படுகிறான் சத்யா. இந்த விஷயமாக அக்கா, மாமாவை நேரில் சந்தித்து பேச வேண்டாம் என முடிவு செய்கிறான். இதற்காக மீனாவுக்கு போன் பண்ணி கார் செட்டுக்கு வர சொல்கிறான். அங்கு முத்து, செல்வம் இருவரும் சீதாவின் கல்யாணம் பற்றி பேசுகின்றனர். ஏதாவது நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கனும் என்கிறான்.
அதற்கு செல்வம் நீ வெளிய தேடுறதுக்கு அந்த அருணையே கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல என்கிறான். இதனால் முத்து டென்ஷனாக, அந்த நேரத்தில் மீனா வருகிறாள். அவளை தொடர்ந்து சத்யாவும் அங்கு வருகிறான். அவனிடம் என்னடா ரெண்டு பேர்கிட்டயும் பேசணும் சொன்ன. எக்ஸாம்ல பாஸாகி, வேலைக்கு எதுவும் ஜாய்ன் பண்ணிட்டியா என கேட்கிறான் முத்து. அதற்கு சீதாவை பத்தி பேச வந்ததாக சொல்கிறான் சத்யா.
அருண் வீட்டுக்கு போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லி இருக்காள். அப்பறம் வீட்டுக்கு வந்து கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டா என்கிறான். அதனைக்கேட்டு முத்து நல்ல விஷயம் தானே. சீதா இப்போதான் நல்ல முடிவா எடுத்து இருக்கா. இதுல கவலைப்பட என்ன இருக்கு. நான் சீதாவுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன் என்கிறான். அதற்கு மீனா, என்னங்க பேசுறீங்க. அவள் விருப்பப்பட்டவரை கல்யாணம் பண்ணி வைக்காம, நீங்களா ஒரு முடிவு பண்றீங்க என கேட்கிறாள்.
சத்யாவும், இதுநாள் வரை சீதா எதுவுமே ஆசைப்பட்டு கேட்டது கிடையாது. வீட்டுக்காக கஷ்டப்பட்டுட்டே இருக்காள். இப்போதான் ஒரு விஷயம் ஆசைப்பட்டு இருக்காள். உங்களுக்கும், அருணுக்கு இடைல பிரச்சனை இருக்கலாம். அதை உட்கார வைச்சு பேசி தீர்த்துக்கலாம் என்கிறான். இதனைக்கேட்டு கடுப்பாகும் முத்து, காலேஜ்ல படிப்பு முடிஞ்சதுன்னு எனக்கு கிளாஸ் எடுக்குறியா. அந்த போலீஸ் எவ்வளவு வன்மத்தோட சுத்துறவன் தெரியுமா?
அவனுக்கு சீதாவை கல்யாணம் பண்ணி வைச்சு அவளோட வாழ்க்கையை கெடுக்க சொல்றீயா. எனக்கு சீதாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்க தெரியும் என்கிறான். ஆனாலும் விடாமல் மீனா, சத்யா தொடர்ந்து பேச ரெண்டு பேரிடமும் கோபத்தில் கொந்தளிக்கிறான். அதனை தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து சவாரிக்கு கிளம்புகிறான். இதனிடையில் வீட்டில் ரவியிடம் புதிய ரெஸ்டாரண்ட் திறப்பதற்கான பிளான் பற்றி பேசுகிறாள் ஸ்ருதி.
அவன் இஷ்டமே இல்லாமல் பேசுவதால் ரெண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. அதனை தொடர்ந்து முத்துவிடம் இதைப்பற்றி பேசுகிறான். ஸ்ருதிக்கிட்ட நீ பேசுடா என கேட்கிறான். அவனும் உனக்கு விருப்பம் இல்லன்னா பண்ண வேண்டாம். நான் பேசுறேன் என்கிறான். இதனை கவனிக்கும் மீனா, ரவிக்கு இஷ்டம் இல்லாததை பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்க. ஆனால் என் தங்கச்சி ஆசைப்படுறதை பண்ண விட மாட்றீங்க என கேட்கிறாள்.
இதனால் மறுபடியும் சீதா கல்யாணம் தொடர்ந்து முத்து, மீனா இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. முத்து சாப்பிடாமல் அங்கிருந்தது எழுந்து போய் விடுகிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலின் எபிசோட் முடிவுக்கு வந்துள்ளது.