புஷ்பா 2 கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்க வேண்டும் - கூல் சுரேஷ்..!
அந்த படத்தின் நடிகராக அல்லு அர்ஜுன் இந்த விவகாரத்தில் சிக்கி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு பல பிரபலங்களும் அவரை முந்தியடித்து நேரில் போய் பார்த்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தை யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
தற்போது அந்த குடும்பத்தின் வம்சமே அழிந்து விட்டது. இதற்கு யார் பதில் சொல்லுவார். அந்த குடும்பத்துக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் பண்ணியே ஆக வேண்டும். ரசிகர்கள் கொடுக்கும் செல்வாக்கினால் தான் நீங்கள் இன்று தனியார் விமானத்தில் செல்லுகின்றீர்கள், காரை செல்லுகின்றீர்கள், கோவாவுக்கு செல்லுகின்றீர்கள். ரசிகர்கள் இல்லை என்றால் இந்த செல்வாக்கு உங்களுக்கு இருக்காது.
ஆகவே எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சரி அது ரஜினி சார், கமல் சார், அஜித் சார், விஜய் சார் ஏன் கூல் சுரேஷா இருந்தாலும் கூட நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எனவே உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்தை தெலுங்கு நடிகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார் கூல் சுரேஷ்.