இணையத்தில் தன்னை அசிங்கமா பேசிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்த புஷ்பா பட நடிகை..!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/4fd4de4fc6b49f77f2b3dbfcfbd274e6.webp)
பல மொழிகளில் கோலாகலமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை அனுசுயா.
இவர் ராம்சரண் -சமந்தாவுடன் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் பகிர்ந்து கணவருடன் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவைபார்த்த ஒருவர். அப்படியெல்லாம் இல்லை அவரிடம் நிறைய பணம் இருக்கிறது அதனால் தான் நீங்கள் அவரை நிறுமணம் செய்து சொகுசாக வாழ்கிறீர்கள் என்று கலாய்த்துள்ளார் . அதை பார்த்த நடிகை அனுசுயாவுக்கு கடும் கோபம் வந்துள்ளது .
அந்த கேவலமான கமெண்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “அது என்னடா தம்பி அப்படி சொல்லி விட்டாய். அவரிடம் எவ்வளவு இருக்கிறது? ஏன் என்னிடம் பணம் இல்லையா? கன்னத்தில் போட்டுக்கொள். இல்லாவிட்டால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன்” என்று கோபத்தில் கண்டபடி கூறியுள்ளார் .
மேலும் மஞ்சள் காமாலை வந்தவன் கண்ணுக்கு உலகம் எல்லாம் மஞ்சளாகவே தெரியுமாம். உன் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நல்லவனாக மாறு” என்று பதில் அளித்துள்ளார்.