அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற புஷ்பா படக்குழு..!

 
அல்லு அர்ஜுன்
தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் நடத்தப்பட்டு வருகின்றன.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘புஷ்பா’. தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

அதில் முதல் பாகம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரும் என முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது புஷ்பா முதல் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. அதற்காக படக்குழுவினர் ஆந்திர மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் முகாமிட்டு ஷூட்டிங் செய்து வருவது தெரியவந்துள்ளது.

அதன்படி அவர்கள் கோதாவரி மாவட்டத்தில் மரேடுமல்லி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளனர். இங்கு விரைவில் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெறவுள்ளனர். விரைந்து ஷூட்டிங்கை முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 

From Around the web