பாக்யா செய்த தரமான செயல்..! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிப்பாரா ஈஸ்வரி..?

 
1

இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியுடன் கிளம்பி போய் ஒவ்வொரு கடையாக பார்க்கிறாள் பாக்கியலட்சுமி. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடையில் உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு? எதுக்காக டைவர்ஸ் ஆச்சு என பர்சனல் கேள்வி எல்லாம் கேட்கிறான் இடத்தின் உரிமையாளர். கடைசியாக லேடிஸ்க்கு இங்கெல்லாம் இடமில்லை என சொல்லி அனுப்புகிறான்.

அதன்பின்னர் பாக்யா, செல்வி இருவரும் ஜுஸ் கடையில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது, எங்க வீட்ல இருக்கிற எல்லாரும் இதுக்கு மேல வீட்ல பசங்களை பாத்துட்டு சந்தோஷமா இருக்க சொன்னாங்க. 25 வருஷமா புருஷன் காசுக்காக கையேந்திக்கிட்டு இருந்துட்டு, ஒரு ஏழு வருஷம் சுயமா சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கேன். இதையெல்லாம் அனுபவிச்சுட்டு இப்போ பசங்க கிட்ட கையேந்தி நிற்க முடியாது. காலைல கூட வாக்கிங் போறப்ப பலரும் ரெஸ்டாரண்ட் பற்றி கேட்டாங்க.

அதுக்கப்புறம் தான் எங்கயும் முடங்கி உட்கார்ந்திட கூடாதுன்னு முடிவு பண்ணேன் என்கிறாள். செல்வி அதையெல்லாம் கேட்டுவிட்டு, இப்போதான் பழைய பாக்யா அக்காவை பார்க்கிறேன். நீ இப்படி கீழ விழுந்த உடனே எழுந்து ஓடுறதை பார்க்கிறது சந்தோஷமா இருக்கு அக்கா. உன் வீட்ல விஷயத்தை சொல்லிட்டியா என கேட்க, இடத்தை பார்த்து டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து சொல்லிக்கலாம் என்கிறான். அதனை தொடர்ந்து இன்னொரு இடம் பார்க்க போகிறான்.

அந்த இடத்தை பார்த்து செல்விக்கு பிடிக்கவே இல்லை. வாந்தி வர மாதிரி இருக்கு என சொல்கிறாள். ஆனால் பாக்யா, அதெல்லாம் சுத்தம் பண்ணி சூப்பரா ரெடி பண்ணிடலாம் என்கிறாள். அந்த நேரம் ஹோட்டலின் ஓனர் வந்து, இங்க ஏற்கனவே மெஸ் வச்சு நடத்தினவங்க பெரிய ஆளாகி வேற இடத்துக்கு போயிட்டாங்க. அவுங்க ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தாங்க. அதையே நீங்களுக்கு கொடுங்க. மாத வாடகை 15000 என்று சொல்லுகிறார்.

பாக்யா வாடகையை குறைக்க முடியுமா என கேட்க, ஏற்கனவே வாங்கிட்டு இருந்ததை விட எப்படி கம்மியா வாங்க முடியும்? யோசிச்சு சொல்லுங்க என்கிறார். உடனே பாக்யா யோசிக்க எதுவும் இல்லை. நான் இப்போ டோக்கன் பணம் தர்றேன். நாளைக்கு முழு பணத்தையும் அட்வான்ஸ் கொடுத்துறேன். அக்ரிமெண்ட் போட்டுக்கலாம் என்கிறாள். அதனை தொடர்ந்து வீட்டுக்கு வரும் பாக்யா, விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? இப்போதான ஒரு அடி வாங்குன. ஒழுங்க வீட்ல இருந்து குடும்பத்தை பார்க்கிட்டா என்ன உனக்கு என கேட்கிறாள். செழியனும் நான் செலவை எல்லாம் பார்க்கிறேன் தானம்மா சொன்னேன். ஏன்ம்மா கேட்க மாட்ற என்கிறான். எழிலும், ஹோட்டல் இடத்தின் போட்டோவை பார்த்து, இங்க எப்படிம்மா நீ சமைப்பா. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு. அப்பறம் நல்ல இடம்மா பார்த்து பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்கிறான்.

இப்படி மொத்த குடும்பமும் அவளுடைய முடிவுக்கு எதிராக நிற்கிறது. கடைசியாக ஈஸ்வரி, இதுக்கு முன்னாடி நீ என் பேச்சை கேட்டதே இல்லை. இப்பவும் அதே மாதிரி பண்ண, நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரித்துவிட்டு போகிறாள். ஆனாலும் மறுநாளே பாக்யா புதிய ஹோட்டலுக்கு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போடுகிறாள். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web