ஜோதிகா நடிக்கும் 50வது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

 
ஜோதிகா மற்றும் சசிகுமார்

நடிகர் ஜோதிகா நடித்து சொந்தமாக தயாரித்துள்ள அவருடைய 50-வது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு பிறகு ஜோதிகா நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட அவர், 10 வருட இடைவேளைக்கு பிறகு ‘36’ வயதினிலே படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து மகளிர் மட்டும், ராட்ச்சசி, தம்பி, பொன்மகள் வந்தாள் என நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அவர் அடுத்து நடித்துள்ள படம் ‘உடன்பிறப்பு’. இரா. சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அண்ணனாக சசிகுமாரும், அவருக்கு தங்கையாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். சூரி, சமுத்திரகனி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கணவர் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகாவே இப்படத்தை தயார்த்துள்ளார். ஏற்கனவே இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ‘உடன்பிறப்பே’ படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என்கிற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

From Around the web