குமார் பற்றிய உண்மைகளை போட்டு உடைக்கும் அரிசி... ஆடிப்போன மீனா..!

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் காலையில் விடிந்ததும் அரசியை மிரட்ட ஆரம்பிக்கிறான். இதுக்கு மேலயும் இந்த வீட்ல நீ இருக்கக்கூடாது. இப்போ உன்னை ஓங்கி குத்துறேன். கதறிட்டே போய் உன் வீட்ல விழுகுற என சொல்கிறாள். அதற்கு அவள் நான் கத்துனா என் வீட்ல உள்ளவங்க வர மாட்டாங்க. இந்த வீட்ல உள்ளவங்க தான் வருவாங்க என சொல்கிறாள். உடனே குமார் அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என சொல்லி அடிக்க வருகிறான்.
அப்போது அரசி விலகி போக கட்டிலில் குத்திவிட்டு கத்த ஆரம்பிக்கிறான். உடனே அவன் அம்மாவும், பாட்டியும் என்னாச்சு என சொல்லி ஓடி வருகின்றனர். அவர் கீழ விழுந்துட்டாரு பாட்டி என சொல்லி அரசியே சமாளிக்கிறாள். இதனால் குமார் எதுவும் பேச முடியாமல் வெளியே போகிறான். அப்போது ரூமை கவனிக்கும் பாட்டி, கட்டில் தனித்தனியாக இருப்பதை கவனித்து, என்னம்மா என விசாரிக்கிறாள். அதற்கு அரசி, எல்லாம் குமாரால தான். அவரோட குறட்டை சத்தம் தாங்க முடியலை.
அதுனால தான் கட்டிலை பிரிச்சு வைச்சேன் என சொல்லி சமாளிக்கிறாள். அதனை தொடர்ந்து குமாரிடம் வந்து, என்ன கதற விடுறேன் சொல்லி நீங்க கதறிட்டு இருக்கீங்க என கேட்டு அவனை மேலும் கோபப்படுத்துகிறாள். அப்போது பழனி அங்கு வர, குமார் போய் விடுகிறான். அரசி அவனிடம் அப்பா எப்படி இருக்காங்க மாமா என கேட்கிறாள். அதற்கு அவன் இன்னும் உயிரோட தான் இருக்காரு. எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்லை. உன் அண்ணி உன்னோட பேசணும் சொன்னாங்க, வா என அழைத்து போகிறான்.
கோயிலில் வைத்து மீனா, ராஜி இருவரையும் சந்திக்கிறாள் அரசி. அப்போது அவளிடம் என்னதான் நடந்தது என விசாரிக்கிறாள். அப்போதும் ராஜி, நான் இல்லன்னா செத்துருவேன் சொன்னாரு. எனக்கும் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன் என சமாளிக்கிறாள். ஆனாலும் மீனா, ராஜி விடாமல் நாங்க நம்ப மாட்டோம். உன்னை அவன் எதுவும் மிரட்டுனானா என துருவி துருவி கேட்கின்றனர். இதனையடுத்து அரசி, அவன் மிரட்டுனது உண்மை தான்.
என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இல்லை, நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி என போட்டோவை எடிட் பண்ணி குமார் மிரட்டியதை சொல்கிறாள் அரசி. அதனை தொடர்ந்து தனக்கு தானே தாலி கட்டி கொண்டதை பற்றி உண்மையும் போட்டுடைக்கிறாள். இதனைக்கேட்டு மீனா, ராஜி இருவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். என்ன மாதிரி ஒரு முட்டாள்தனம் பண்ணி இருக்க. நீ மொத வீட்டுக்கு வா. உண்மையை சொல்லு என்கின்றனர்.
ஆனால் அரசி அதை கேட்காமல், நான் செஞ்ச தப்பு அவன் மிரட்டுனப்ப உங்க கிட்ட வந்து சொல்லாதது தான். அதே மாதிரி அத்தை பேச்சை கேட்டதும் தான் எனவும் சொல்ல, மீனாவுக்கு மேலும் ஷாக். அந்த சுகன்யா எல்லாத்தையும் பண்ணிதான் எங்களோட உன்னை தேடி இருக்காங்க. அவுங்களால எத்தனை பிரச்சனை உனக்கு வந்தது. அப்படி இருந்தும் அவுங்களை எதுக்கு நம்புன. நடந்த எல்லாத்தையும் விடு. இப்போ நீ வீட்டுக்கு வா.
அந்த குமார், சுகன்யா ரெண்டு பேர் முகத்திரையையும் கிழிக்கனும் என சொல்கிறாள் மீனா. ராஜியும் அந்த குமாரை விடக்கூடாது. அவனை பழி வாங்குறேன் சொல்லி உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காத என சொல்கிறார்கள். இதனையடுத்து ராஜி அண்ணி பேச்சை கேட்பாளா? உண்மையை அனைவரிடமும் சொல்வாளா? என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.