மகேஷ் பெயரில் கேக் வாங்கும் ரோகினி...! அதிர்ச்சியில் மனோஜ்..!   

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் ரோகிணி பிரெண்ட்ஸோட பர்த்டே பார்ட்டி போக போறேன் என சொல்கிறாள். அதற்கு மனோஜ் எந்த பிரெண்ட்? எங்க போற என கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். உடனே ரோகிணி என்ன மனோஜ், இவ்வளவு கேள்வி கேட்கிற என கேட்க, நீ பாட்டுக்கு போயிடுவ. நான் அம்மா கேட்டால் என்ன சொல்லுவேன் என்கிறான். இதனைக்கேட்டு அப்செட்டாகும் ரோகிணி, நீ ஓவரா அம்மா பிள்ளையா நடந்துக்கிற மனோஜ். நீ என்கூட வந்தால் தான் உன் அம்மாவுக்கு பிரச்சனை. நான் மட்டும் போனால் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறாள்.


ஆனாலும் மனோஜ் விடாமல் எந்த பிரெண்ட். பையனா, பொண்ணா என கேட்கிறான். ரோகிணி கடுப்பாகி பொண்ணு தான் என சொல்லி கிளம்பி போகிறாள். அப்போது மனோஜ் அவளை பாலோ செய்து பின்னாடியே போகிறான். ரோகிணி பேக்கிரி ஒன்றில் பர்த்டே கேக் வாங்குகிறாள். அவள் போனதும் மனோஜ் அந்த கடைக்கு வந்து பர்த்டே கேக் ஆர்டர் பண்ணுவது போல் பேச்சு கொடுக்கிறான். அதனை தொடர்ந்து கேக்கில் அவள் மகேஷ் என பெயர் வாங்கிட்டு போனது தெரிய வருகிறது. இதனால் மனோஜ் கடுமையாக அதிர்ச்சி அடைகிறான்.


அதன்பின்னர் முத்து குடித்துவிட்டு இரவில் முழு போதையில் வருகிறான். அங்கிருக்கும் விஜயாவை பார்த்து அம்மா அம்மா என்றெல்லாம் பாடி அதகளம் செய்கிறான். மீனா இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, நீ திமிர் பிடிச்ச அம்மாதான். ஆனால் அப்பாவோட பேச்சை எப்பவும் மீற மாட்ட என மீனாவை குத்திக்காட்டுவதை போல் பேசுகிறான். அப்போது அண்ணாமலையும் அங்கு வர, வாப்பா அம்மா உன்னோட பேச்சை என்னைக்குமே மீறுனது இல்லைல. ஒரு பொண்டாட்டி அப்படித்தான்ப்பா இருக்கனும் என சொல்கிறான். அண்ணாமலை அவனிடம் பேசாம தூங்கு. காலைல பேசிக்கலாம் என சொல்லி விஜயாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறார்.


அதனை தொடர்ந்து மீனாவிடம் பார்த்தியா, என் அம்மா என்னைக்கும் அப்பா பேச்சை மீறினது இல்லை. ஆனால் நீ என பேச, நீங்க நான் சொல்றதை கேட்கிற மனநிலைல இல்லை என சொல்லி போய் விடுகிறான். அப்போது அங்கு வரும் மனோஜ் வாயை வைத்து சும்மா இருக்காமல், அந்த காலத்துல அக்கா தங்கச்சியை சேர்த்து கல்யாணம் பண்ணிப்பாங்க. அதே மாதிரி பண்ணிக்கலாம் பார்க்குறியா என கேட்கிறான். இதனால் முத்து டென்ஷனாகி அவனுக்கு ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.

இந்த களேபரங்கள் எல்லாம் முடிந்த பின்னர் மறுநாள் மீனாவிடம் பேசுகிறார் அண்ணாமலை. முத்து மறுபடியும் ஆரம்பிச்சுட்டானாமா? உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு தெரியுது. என்னால அதுக்கு ஏதாவது பண்ண முடியும்னா மட்டும் என்கிட்ட சொல்லு என கேட்கிறார். அப்போது மீனா, சீதாவின் கல்யாணம் பற்றி சொல்கிறாள். அருணை காதலிப்பது பற்றியும் கூறுகிறாள். இதனைக்கேட்டு அண்ணாமலையும் குழம்புகிறார்.

From Around the web