மீண்டும் பிரமாண்டமாக துவங்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஷூட்டிங்க்..!

 
ஆர்.ஆர்.ஆர் படக்குழு

பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் பாடல் காட்சிகளுக்கு வேண்டி படக்குழு வெளிநாடு செய்ய முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லூரி சீதா ராமராஜூ மற்றும் கோமரம் பீம் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக இப்படத்தை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது.

இந்நிலையில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் பல்வேறு மொழிகளில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜமவுலி ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் துவங்கவுள்ளார்.

ஒரு பாடல் காட்சிக்கு வேண்டி விரைவில் உக்ரைன் செல்லவுள்ளது ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதற்கான காட்சிகளில் நடிப்பதற்கு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது.
 

From Around the web