தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய ஷபானா !

 
1

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் நடிகை ஷபானா ஷாஜகான். செம்பருத்தி சீரியல் மாபெரும் ஹிட் அடைந்ததை ஒட்டி ஷபானாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்தின்போது ஷபானா செம்பருத்தி தொடரில் நடித்து வந்தார். ஜீ தமிழ் நாயகிக்கும் விஜய் டிவி நாயகனுக்கும் எப்படி காதல் ஏற்பட்டது ? என்பதுதான் இவர்களின் திருமணத்தின்போது ரசிகர்கள் கேட்ட கேள்வியாக இருந்தது. அவ்வபோது பொது இடங்களில் சந்திக்கும் இவர்கள் நண்பர்களாகவே அறிமுகமாக இருக்கிறார்கள். அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த 2021ல் நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்

ஷபானா இஸ்லாம் குடும்பத்தை சேர்ந்தவர். செம்பருத்தி சீரியலில் நடிக்கும்போது ஹிந்து பெண்கள் பின்பற்றக்கூடிய சில விஷயங்களில் செய்திருப்பார். உதாரணமாக கோவிலுக்கு செல்வது, பொட்டு வைப்பது, விரதங்கள், பூஜை செய்வது போன்ற பல காட்சிகள் அந்த சீரியலில் இடம் பெற்றிருக்கும். சீரியலில் ஷபானா நடித்த இந்த காட்சிகளுக்கு அவர் வீட்டில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சீரியலில் நடித்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு குடும்பத்தாருடன் பேசாமலேயே ஷபானா இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஷபானாவின் பெற்றோர் ஹிந்து பையனை திருமணம் செய்யக்கூடாது என கண்டிப்பாக கூறி இருந்தார்களாம். அதற்காகவே ஒரு ஹிந்து பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டிருந்தாராம் ஷபானா. அப்போதுதான் ஆரியனுடன் அவருக்கு நட்பு ஏற்பட தொடங்க இருக்கிறது. காலப்போக்கில் அந்த நடப்பு காதலாக மாற, அவர்கள் இருவரும் அவர்களது காதலை வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். ஷபானா வீட்டில் ஆரியன் மற்றும் ஷபானாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணமும் செய்துக்கொண்டார்கள்.

From Around the web