புனேவில் துவங்கும் ஷங்கர் - ராம் சரண் படம்..!

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்துக்கான படப்பிடிப்பு புனே நகரத்தில் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 பட விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், ஷங்கர் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டார். தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இதற்கிடையில் புனே இந்த படத்துக்கான பட்பபிடிப்பு பிரமாண்டமாக துவங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து கியாரா அத்வானி இந்த படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து படத்தை முடித்துவிட்டு தான் மற்ற படங்களில் அவர் நடிக்க செல்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளன.