சிம்புவின் எஸ்.டி.ஆர் 48 படத்தில் 2 கதாநாயகிகள்..!!
![simbu](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/6f2e994cffc8f94f675565f1fdf42c4f.jpeg)
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து தன்னுடைய கதைகள் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினார் சிம்பு. அதன் பலனாக கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தனிந்தது காடு’ படத்தில் நடித்தார்.
இந்த படமும் நல்ல வரவேற்பை பதிவு செய்தது. அதை தொடர்ந்து ஒப்லி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான இந்த படம் வசூலில் வெற்றி பெற்றிருந்தாலும், சிம்புவின் முந்தைய படங்களுக்கு இணையாக பெயர் பெறவில்லை.
எனினும் இவர் நடிக்கும் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது. ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறது. தற்போது எஸ்.டி.ஆர் 48 என்று படம் குறிப்பிடப்படுகிறது.
இந்த படத்தில் முதன்மையான கதாநாயகி வேடத்தில் நடிப்பதற்கு படக்குழு தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இன்னும் அவருடைய வருகை உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து படத்தில் மற்றொரு கதாநாயகிக்கான வேடமும் உள்ளது.
அதில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி சங்கர், அனு இமானுவேல் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. முன்னதாக தற்போது தேசிங்கு பெரியசாமி படத்துக்கான லொக்கேஷனை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.