முன்னணி ஓடிடி நிறுவனத்தின் வலை தொடரில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா..!

 
எஸ்.ஜே. சூர்யா

பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக வலை தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

தமிழில் ‘வாலி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, அதை தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை இயக்கினார். ‘அன்பே ஆருயிரே’ என்கிற அவர் இயக்கிய படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார்.

இதன்மூலம் தமிழக ரசிகர்களாக் கவனிக்கப்பட்டார். அதற்கு பிறகு பல்வேறு படங்களி தொடர்ந்து ஹீரோ, வில்லன் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது ‘டான்’, ‘மாநாடு’, ‘கடமையை செய்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். இதில் மாநாடு படம் அவருடைய அடுத்தப்படமாக வெளிவரவுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.

இதற்கிடையில் புதியதாக பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் வலை தொடரில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். இதை விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளார்.

சஸ்பென்ஸ் கலந்த அதிரடி த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை பாணி இருக்கும். இதற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் சிரீஸ் தொடர்பான புதிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web