அஜித் பற்றி புன்னகை அரசி சினேகா சொன்ன கியூட் தகவல்..!

ஒருபக்கம் கார் பந்தயம் மறுபக்கம் சினிமா என வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகின்றார் அஜித். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் ஒரே சமயத்தில் நடித்தார் அஜித். பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படமும் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியானது. இதில் இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. அஜித் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் AK 64 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி தான் பலரிடமும் இருக்கின்றது. ஒருபக்கம் ஆதிக் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்கின்றனர், மறுபக்கம் தனுஷ் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆனால் இன்றளவும் AK 64 பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக அஜித் பேட்டி கொடுத்து வருகின்றார். கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வரும் அஜித் அங்கு மீடியாக்களிடம் பேசி வருகின்றார். அவர் பேசும் விஷயங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
அதுபோல அஜித்தை பற்றி மற்ற பிரபலங்கள் பேசும் விஷயங்களும் அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகையான சினேகா அஜித்தை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அஜித்துடன் ஜனா என்ற திரைப்படத்தில் நடித்தார் சினேகா. இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்கள் பற்றி சினேகா பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்படுவார்கள்.அவர்களிடம் அஜித், அமைதியாக லைனில் வாங்க ,நான் போட்டோ கொடுக்குறேன் என்பார். ஷூட்டிங் முடிந்து பொறுமையாக இருந்து அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டு தான் செல்வார் அஜித். அவ்ளோ பொறுமையாக ஒவ்வொரு ரசிகருடனும் அஜித் போட்டோ எடுத்துக்கொள்வார்.
அதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்.அவ்ளோ எளிமையாக அஜித் இருப்பார். அவரை போல அவரின் ரசிகர்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என நினைப்பார் அஜித். இவர் பேசிய விஷயங்கள் தான் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.