பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சூரி..!!
Jan 27, 2024, 06:05 IST
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது பவதாரிணியின் மறைவுக்கு நடிகர் சூரி பெருந்துயருடன் வேதனை தெரிவித்துள்ளார்.உலகத்தில் உள்ள பல மக்கள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இளையராஜாவின் இசை ஆறுதலாக இருந்துள்ளது; இன்று அவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவருக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் எதுவும் இல்லை; எந்த தகப்பனுக்கும் நடக்கக் கூடாத துயரம் இது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.