ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

 
1

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் விரைவில் நடக்க இருக்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தன் மனைவியுடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கிரிக்கெட் வீரரான ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா சமயத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்த ஆறு மாதத்தில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இதனால், ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா. இப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. ஷங்கர் ‘இந்தியன்2’, ‘கேம் சேஞ்சர்ஸ்’ படங்களில் பிஸியாக உள்ளார்.

From Around the web