ரஜினிகாந்திடம் மகள் சவுந்தர்யா வைத்த ’திடீர்’ கோரிக்கை..!

 
ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

‘அண்ணாத்த’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்ட அவருடைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தந்தை ரஜினிகாந்து மற்றும் பட இயக்குநர் சிவா இருவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

சமீபத்தி சென்னையில் இந்த படத்துக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து படம் பார்த்தார்.

இந்நிலையில் படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சவுந்தர்யா ஹூட் செயலியில் போட்ட குரல் பதிவில், படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன்.

நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

From Around the web