கையில் களவுமாக மாட்டிய சுதாகர்.. கோபி ஷாக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் கோபி வந்து ரெஸ்டாரண்ட் வைச்சு பிசினஸ்ல பெரிய ஆளா ஆகனும் நினைக்கிறது பாக்யாவோட கனவு. நீங்க அவளோட பழைய ரெஸ்டாரண்ட் வாங்கி இருப்பதா வீட்ல வந்து சொன்னாள் என கேட்கிறான். உடனே சுதாகர் நல்லவனை போல் எந்த ரெஸ்டாரண்ட். எனக்கு சம்பந்தியோட பழைய ரெஸ்டாரண்ட் இருக்கிற இடமே தெரியாது. சம்பந்தி எதுக்காக என்னை தப்பா நினைச்சுட்டு இருக்காங்க தெரியலை.
நான் எந்த ரெஸ்டாரண்ட்டும் சமீபமா வாங்கலை. கடைசியா பாக்யா மேடமோட ரெஸ்டாரண்ட் தான் எனக்கு கிப்ஃட்டா கிடைச்சது என சொல்கிறான். நீங்களும் என்னை தப்பா நினைச்சுட்டு இருக்கீங்களா என கேட்கிறான். கோபி அதெல்லாம் இல்லை என சொல்லிவிட்டு கிளம்புகிறான். அதனை தொடர்ந்து அவன் போகும் வழியில் பாக்யா ரெஸ்டாரண்ட்டில் சுதாகர் கார் நிற்பதை கவனிக்கிறான். உடனே அவன் உள்ளே போய் பார்க்க, அங்கு சுதாகரும் அந்த ரெஸ்டாரண்ட் ஓனரும் ஒன்றாக பேசி கொண்டிருக்கின்றனர்.
கோபி அதை பார்த்து ஷாக்காகி இங்க என்ன சம்பந்தி பண்றீங்க என கேட்கிறான். உடனே சுதாகர் சமாளித்து, நீங்க என்மேல சந்தேகப்பட்டீங்கள்ள. அதை தீர்த்து வைக்க தான் இங்க வந்தேன். இந்த ரெஸ்டாரண்ட் இவரு தான் வாங்கி இருக்காரு என தனது பக்கத்தில் இருக்கும் ஆளை காண்பிக்கிறான். கோபி அதையும் நம்பிவிட்டு அங்கிருந்து போகிறான். அதனை தொடர்ந்து தனது ஆளிடம் இந்த ரெஸ்டாரண்ட்டை நம்ம கம்பெனி பேர்ல சேர்க்க வேண்டாம்.
அந்தம்மா பேசுன பேச்சுக்கு தான் ரெஸ்டாரண்ட்டை வாங்குனேன் என்கிறான். இதனையடுத்து பாக்யா வீட்டுக்கு வந்ததும் கோபி, நான் சம்பந்தியை நேர்ல பார்த்து பேசுனேன். அவர்மேல எந்த தப்பும் இல்லை. அவர் உன் ரெஸ்டாரண்ட்டை வாங்கவே இல்லை என்கிறான். அப்போது எழிலும், நானும் என் பிரெண்டோட அப்பாக்கிட்ட பேசுனேன். அவரும் இதைத்தான் சொன்னாரு என்கிறான். உடனே ஈஸ்வரி தேவையில்லாமல் ஏதாவது பிரச்சனையை கிளப்பி, இனியாவோட வாழ்க்கைல விளையாடிடாத என்கிறாள்.
உடனே பாக்யா, என் கைல இருக்கு எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறேன். இதுக்கு மேலயும் என் பொண்ணு மேல இருக்க பாசத்தை நிரூபிக்க வேண்டியது இல்லை. நான் உங்ககிட்ட பொய் சொல்றேன் நினைக்குறீங்களா? அந்தாளு தான் எல்லாத்துக்கு காரணம். உங்ககிட்ட ஒரு மாதிரி பேசுறாரு. என்கிட்ட ஒரு மாதிரி பேசுறாரு என உறுதியாக சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறாள். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.