சுதாகர் சொன்ன வார்த்தை.. பாக்யா எடுத்த அதிரடி முடிவு!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் சுதாகர் வீட்டுக்கு வந்து கோபி பேசும் போது, அவன் நல்லவன் போல் நடிக்கிறான். சம்பந்தி தான் என்னை புரிஞ்சுக்காம பேசுறாங்க. என்னோட லீகல் டீம், ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாரும் ரெஸ்டாரண்ட் எங்க குடும்பத்து ஆளுங்க பேர்ல வரனும் சொல்றாங்க. அதுனால தான் இந்த முடிவை எடுத்தோம். வேணும்னா ரெஸ்டாரண்ட்க்காக சம்பந்தியம்மா கேட்குற பணத்தை வேணா நான் கொடுக்குறேன் என்கிறான்.
இதனையடுத்து கோபி, செழியன் என்ன பேசுவது என்பது தெரியாமல் குழம்புகின்றனர். சுதாகரும் எனக்கு அவசரமா மீட்டிங் இருக்கு. நாம் கிளம்புறேன் என சொல்லி விட்டு போய்விடுகிறான். அதன்பின்னர் செழியன், கோபி வந்து நடந்த விஷயங்களை சொல்கின்றனர். ரொம்ப யோசிக்க வேண்டாம். சம்பந்தி தப்பா எதுவும் பண்ண மாட்டாங்க என்கின்றனர். ஈஸ்வரியும் நீ சம்பந்தியை அந்த ஆளு, இந்த ஆளுன்னு பேசுனியே. அவர் எவ்வளவு பெருந்தன்மையா நடந்து இருக்காரு என்கிறாள்.
பாக்யா கடுப்பாகி அந்த ஆளை முட்டாள்தனமா நீங்க நம்புங்க. நான் நம்ப மாட்டேன். என்னை ரெஸ்டாரண்ட் போயிருச்சு. இனிமேல் என் கைல இல்லை. இந்த உண்மையை நான் ஏத்துக்கிட்டு தான் ஆகனும். இந்த நேரத்துல எனக்கு பொய்யா நம்பிக்கை கொடுத்து ஏமாத்திடாதீங்க என கோபமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள். இதனையடுத்து ரெஸ்டாரண்ட் வர, அங்கு செல்வி முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறாள்.
அவளிடம் ஏன் இனியா கல்யாணத்துக்கு வரலை என கேட்க, என் பையனை பத்தியும் நான் யோசிக்கணும்ல அக்கா என சொல்லிவிடுகிறாள். அதன்பின்னர் பாக்யா நடந்ததை எல்லாம் நினைத்து ரெஸ்டாரண்ட் வாசலில் உட்கார்ந்து பீல் பண்ணி கொண்டு இருக்க, செல்வி வந்து பேசுகிறாள். இப்போ தான் ரெஸ்டாரண்ட்டை இனியா பேர்ல நீ எழுதி கொடுத்து இருக்கன்னு கேள்விப்பட்டேன். நீ கூட சொன்னா அந்தாளு மனசுல ஏதோ வைச்சு பண்றாருன்னு. நான் நம்பாம விட்டேன் என்கிறாள்.
அப்போது எழிலும் அங்கு வர, சுதாகர் மேல கேஸ் கொடுக்கலாம் என்கிறான். உன்கிட்ட இருந்து ஏமாத்தி வாங்கிட்டாங்கன்னு நடந்த விஷயங்களை நான் சொல்றேன் என கூறுகிறான். ஆனால் பாக்யா அந்த வீட்ல தான் நம்ம பொண்ணு வாழ போயிருக்கா. அதை நம்ம மறந்திட கூடாது. இப்போதைக்கு பழைய ரெஸ்டாரண்ட் வைச்சு கடனை எல்லாம் அடைக்கிறது பத்தி தான் யோசிக்கனும் என்கிறாள்.