சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கும் தனுஷ்..!

 
தனுஷ் மற்றும் சுந்தர். சி
அரண்மனை 3 படத்தை தொடர்ந்து சுந்தர். சி இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்கள், மேலும் புதிய படங்கள் என தொடர்ந்து படங்களை கமிட் செய்து வருகிறார்.

தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார். திருச்சற்றம்பலம் என்கிற பெயரில் தயாராகி வரும் இப்படத்தில் நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர் மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை சுந்தர். சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சுந்தர். சி  ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.

From Around the web