தலைவரின் தங்கமான மனசு : லைகாவிற்கு உதவும் ரஜினிகாந்த்..!

நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரஜினியை தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரஜினியை தவிர இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய திரையுலகே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கூலி, ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக எந்த படத்தில், யாருடைய இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் நடிப்பார் என்ற பேச்சும் மறுபக்கம் போய்க்கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படத்தை பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா ? இல்லையா ? என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவலை கேள்விப்படும் அனைவரும் ரஜினியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதாவது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அவர்கள் தயாரிக்கும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. ரஜினியை வைத்து 2 .0 , தர்பார், லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களை தயாரித்தது லைகா. இதில் 2 .0 படத்தை தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை.
இந்நிலையில் லைகா பின்னடைவில் இருக்கும் இந்த சமயத்தில் ரஜினி தானாக முன் வந்து லைகாவிற்கு ஒரு படம் பண்ண இருப்பதாக கூறியிருக்கிறாராம். முன்பணம் எதுவும் வாங்காமல் கால்ஷீட் கொடுத்து படம் முடிந்த பிறகு சம்பளத்தை பெற முடிவெடுத்துள்ளாராம் ரஜினி. குறிப்பாக மற்ற படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தில் லைகாவிற்கு ஒரு படத்தில் நடித்து கொடுக்க ரஜினி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வந்துள்ளது.
தன்னை வைத்து பல படங்களை தயாரித்த லைகா நிறுவனத்திற்காக இந்த முடிவை சூப்பர்ஸ்டார் எடுத்துள்ளதாக தெரிகின்றது. இதற்கு முன்பே ரஜினி இதுபோன்ற பல தயாரிப்பாளர்களுக்கு தானாக முன் வந்து உதவியிருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது லைகாவிற்கும் உதவ முன்வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.இந்த தகவலை கேள்விப்பட்ட பலரும் ரஜினியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.