உங்களோட அந்த மனசு தான் சார் கடவுள்... ஒரு மனிதனின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றி வைத்த நீயா நானா நிகழ்ச்சி..!

 
1

நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கோபிநாத்துக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தன் நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் இதுவரை தன் வாழ்க்கையில் செய்யாத விஷயத்தை செய்ய வைத்தார் கோபிநாத்.

அந்த வீடியோவை ஷேர் செய்து கோபிணாவை எல்லோரும் பாராட்டுகிறார்கள். எல்லா மனுஷனுக்கும் ஒரு ஆசை இருக்கும். நான் இத்தனை ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன், சம்பாதித்திருக்கிறேன், கஷ்டப்பட்டிருக்கிறேன், நல்லது கெட்டதுலாம் பண்ணியிருக்கிறேன். ஆனால் எனக்கு இது மாதிரி ஒன்னும் பண்ணிக்கணும்னு ஆசை. இதுவரைக்கும் நான் செஞ்சுக்கவே இல்லை. அது நிறைவேறவே இல்ல. அப்படி உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்னென்ன இருக்கு என தன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் கேட்டார் கோபிநாத்.

அதற்கு ஒருவரோ, கோட் சூட் போட்டுக் கொண்டு, நல்ல டிரெஸ் போட்டுக்கிட்டு வெளியே போகணும்னு ஆசை சார் என்றார். ஒரு கோட் சூட் கூட போட்டது இல்லையா என கோபிநாத் கேட்டதற்கு இல்லை சார் என பாவம் போன்று சொன்னார் அவர். அந்த மனுஷன் சொன்னதை கேட்கும் போதே பாவமாக இருந்தது.


இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராததை செய்தார் கோபிநாத். தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி அந்த நபருக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார். கோட்டில் அவரை வைத்து புகைப்படம் எடுத்தார். மேலும் இந்த கோட்டை சிறிது நேரம் நீங்களே போட்டுக்கோங்க என்றார் கோபிணா.


வாழ்க்கையில் இதுவரை அணியாத கோட்டை போட்டதும் அந்த நபர் அடைந்த சந்தோஷத்தை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இப்படியொருவரின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்த கோபிணாவை அனைவரும் பாராட்டுகிறார்கள்.


இதற்கிடையே விஜய் டிவியை கலர்ஸ் தமிழ் சேனல் வாங்குவதால் கோபிநாத், ப்ரியங்கா தேஷ்பாண்டே, மாகாபா ஆனந்த் ஆகியோர் சேனலை விட்டு கிளம்புவதாக கூறப்படுகிறது. விஜய் டிவியை வாங்கி பெயர், லோகோவை மாற்றி, புது நிகழ்ச்சிகளை கொண்டு வரப் போகிறார்களாம்.

நீங்க எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் அறிமுகப்படுத்துங்க ஆனால் எங்களுக்கு நீயா நானா நிகழ்ச்சியை தூக்கக் கூடாது. மேலும் கோபிணா தான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.


 

From Around the web