இணையத்தில் வைரலாகும் செய்தி..! சிம்பு ஹன்சிகா காதல் பிரிவுக்கு இதுதான் காரணமாம்..!
![1](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/45a549cde32b1441caa8c5272a4019e7.jpg)
சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்த நிலையில் பிரிந்தனர். இருவரும் இன்று தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களைக் கடந்து செல்கின்றனர். ஹன்சிகா சமீபத்தில் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மறுபுறம், சிம்பு தனது கேரியரில் வலுவான பாத்திரங்களில் நடிக்கிறார். சிம்புவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒருமுறை ஹன்சிகாவை திருமணம் செய்ய சிம்பு தயாராகிவிட்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது
இது குறித்து செய்யாறு பாலு வெளிப்படையாகவே கூறியிருந்தார். அவர் கூறுகையில், “சிம்புவின் படங்கள் போலவே காதல்களும் பிரபலம். சிம்புவின் முன்னாள் காதலிகளில் நயன்தாராவும் அடங்குவர்.நயன்தாராவும், சிம்புவும் ஒரு காலத்தில் ரசிகர்களின் விருப்பமான ஜோடி. வல்லவனுக்குப் பிறகு தான் சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்தனர்.
இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, சிம்புவுடனான தனது உறவை நயன்தாரா முடித்து கொண்டார். ஹன்சிகாவுடனான சிம்புவின் காதல், மிகவும் பகிரங்கமாகி திருமணம் வரை சென்றது. வால் படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவும் ஹன்சிகாவும் நெருங்கி பழகுகினார்கள். இருவரின் காதலையும் திருமணம் வரை கொண்டு வருவதே முடிவு. இருவரும் அஜித், ஷாலினி போல ஜோடியாக வாழ விரும்பினார்கள்.
இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, சிம்புவுடனான தனது உறவை நயன்தாரா முடித்து கொண்டார். ஹன்சிகாவுடனான சிம்புவின் காதல், மிகவும் பகிரங்கமாகி திருமணம் வரை சென்றது. வால் படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவும் ஹன்சிகாவும் நெருங்கி பழகுகினார்கள். இருவரின் காதலையும் திருமணம் வரை கொண்டு வருவதே முடிவு. இருவரும் அஜித், ஷாலினி போல ஜோடியாக வாழ விரும்பினார்கள்.
சிறுவயதில் இருந்தே சிம்பு எதற்கும் கஷ்டப்பட்டதில்லை. அதனால் சிம்புவுக்கு இது எல்லாம் நகைச்சுவையாக இருந்தது. குழந்தைகளின் விளையாட்டு இயல்பு மாறாமல் இருந்தது. பலமுறை பார்த்திருக்கிறேன். சிம்புவின் நடத்தை தான் ஹன்சிகாவை அவரிடம் இருந்து விலக்கியது. அவர் கொஞ்சம் துடுக்கு. எல்லா விஷயங்களையும் அப்படி தான் செய்வார். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை அதனால் பிரேக் அப் செய்து இருப்பார்கள்” என்றார்.