அடுத்து நடந்த ட்விஸ்ட்..! சிந்தாமணியிடம் சிக்கிய ஸ்ருதி..!

 
1

 இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்டில் பணத்தஹி எடுத்ததும் அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கின்றனர். உடனடியாக முத்து, ரவி, செல்வி காரில் போய் ஏறுகின்றனர். ஸ்ருதி வரும் போது அவளது முடி கதவில் சிக்கி விடுகிறது. இதனால் அவள் வர லேட் ஆகிறது. இதனிடையில் சிந்தாமணி அங்கு வந்து விடுகிறாள். ஸ்ருதியை பார்த்து யாரும்மா கண்ணு நீ. உனக்கு என்ன வேணும் என கேட்கிறாள்.

ஸ்ருதி அது வந்து என தயங்கி கொண்டே இருக்க, நீ இங்கயே இரும்மா. நான் வந்துறேன் என சொல்லிவிட்டு சிந்தாமணி உள்ளே போகிறாள். அந்த நேரத்தை யூஸ் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள் ஸ்ருதி. உடனடியாக காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறான் முத்து. மீனாவிடம் போன் பண்ணி பணம் கிடைத்துவிட்ட விஷயத்தை சொல்கிறான்.


நீ ஒரு பத்து நிமிஷம் கழிச்சு போன் பண்ணி சிந்தாமணிக்கிட்ட பணம் எடுத்துத்தை பத்தி சொல்லு. அப்பத்தான் நம்மளை பத்தி புரியும் என்கிறான். இதனிடையில் சிந்தாமணியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தததை பற்றி வீட்டில் உள்ளவர்கள் சொல்கின்றனர். ஒரு மஞ்சப்பை எடுத்துட்டு போன விஷயத்தையும் கூறுகின்றனர். சிந்தாமணி பதறிப்போய் ரூமில் வந்து பீரோவை திறந்து பார்க்க, அதில் மீனாவிடம் இருந்து எடுத்த பணம் காணவில்லை.


அந்த சமயத்தில் மீனா போன் பண்ணி, என்ன கண்ணு பண்ற, வீட்ல இருந்த பணத்தை தூக்கிட்டு போய்ட்டாங்களா என கேட்கிறாள். சிந்தாமணி அதிர்ச்சியாகி, அதெப்படி உனக்கு தெரியும் என கேட்கிறாள். அது என்கிட்ட இருந்து நீ அடிச்ச பணம் தான. என் குடும்பத்து ஆளுங்க தான் அந்த பணத்தை எடுத்தது. என்கிட்ட இருந்து நீ பறிச்ச கல்யாண ஆர்டரை நான் பிச்சை போட்டதா நினைச்சுக்கிறேன் என்கிறாள். இதனால் சிந்தாமணி கடுமையாக அதிர்ச்சியடைய, வாழு. வாழ விடு என சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.


இதனையடுத்து முத்து வீட்டுக்கு வந்ததும் பணம் கிடைத்த விஷயத்தை அண்ணாமலையிடம் சொல்லி சந்தோஷப்படுகிறான். இதனைக்கேட்டு விஜயா ஆடிப்போகிறாள். அதனை தொடர்ந்து இனிமேல் அந்த சிந்தாமணிக்கிட்ட பழக்கம் வைச்சுக்காதா. நல்லதுக்கு இல்லை என சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார்  அண்ணாமலை. 

From Around the web