ஓங்கி ஒரு அறை கொடுத்த சுருதி... செய்வதறியாது முழிக்கும் சிந்தாமணி ஆட்கள்..!

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரியாக போய் பணத்தை எடுப்பதற்கு பிளான் போடுகிறான் முத்து. இதுப்பற்றி ஸ்ருதி, ரவி, செந்தில் ஆகியோரிடம் பேசுகிறான். அவனுடைய பிளானை கேட்டு ரவி, செந்தில் இருவருமே பயப்படுகின்றனர். ஆனால் ஸ்ருதி இந்த விஷயத்தில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறாள். இது ரொம்ப இன்டஸ்டிரங்கா இருக்கு. நான் நிறைய டப்பிங் பேசி இருக்கேன். அதுனால நல்ல நடிப்பேன் என சொல்கிறாள்.
ஆனாலும் ரவி, செந்தில் இருவரும் தயங்குகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் எதுவும் போயிட்டால் பிரச்சனையாகிரும் என்கிறார்கள். அதற்கு முத்து அந்த பணம் மீனாக்கிட்ட இருந்து திருடியது. அதுனால அவுங்களால போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது என சொல்கிறான். இதனையடுத்து யார் யார் என்ன கெட்டப் போடலாம் என பேசுகின்றனர். ஸ்ருதி நான் ஆபிஸர் ரோல் பண்றேன். எனக்கு அது கரெக்ட்டா இருக்கும் என சொல்கிறாள்.
இதனையடுத்து ஸ்ருதி ஆபிசர் ரோலிலும், ரவி அவளுக்கு உதவியாளராகவும் நடிக்க பிளான் போடுகின்றனர். மீனா அந்த வீட்டுக்கு ஏற்கனவே போய் விட்டு வந்ததால், அவளை பற்றி எல்லாருக்கு தெரியும் என்பதால் அங்கு மீனா வர வேண்டாம் என முடிவு செய்கின்றனர். அதன்பின்னர் மறுநாள் பிளான் போட்ட மாதிரி காலையிலே அங்கு ரெடியாகி வருகின்றனர். முத்து ஐடி கார்டு எல்லாம் எடுத்து கொண்டு முழு பிளானுடன் களத்தில் இறங்குகிறான்.
அதன்பின்னர் சிந்தாமணி அங்கிருந்து கிளம்பிய பிறகு பார்வதிக்கு போன் போட்டு பேசுகிறான் முத்து. அத்தை சிந்தாமணி கிளம்பிட்டாங்க. ஒரு மூன்று மணிநேரம் அவுங்க வாராமல் பார்த்துகோங்க என சொல்கிறான். இதனையடுத்து அவர்கள் உள்ளே நுழைந்து ஸ்ருதி இந்தியிலும், ரவி ஆங்கிலத்திலும் பேசுகின்றனர். அவர்களிடம் இருக்கும் போனை எல்லாம் வாங்குகின்றனர்.
ஆனாலும் ஒருவன் சிந்தாமணிக்கு போன் போட போகிறான். அதனை பார்த்து ஸ்ருதி அவனுக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்து போனை வாங்குகிறாள். இதனை பார்த்து கேரக்டராவே மாறிட்டாள் என முத்து, ரவி, செல்வம் வியப்பாக பார்க்கின்றனர். அதனை தொடர்ந்து வீடு முழுக்க தேட பணம் கிடைக்கவில்லை. அப்போது அங்குள்ள ஒருவன் வந்து, அக்கா பணம் எல்லாத்தையும் பீரோவில் தான் வைத்து இருக்காங்க என சொல்கிறான்.
அதனை தொடர்ந்து முத்து அந்த இடத்தில் போய் பார்க்கும் போது பணத்தை எடுத்து விடுகிறான். ரவி, ஸ்ருதி, செல்வத்தை அழைத்து பணம் கிடைத்து விட்டதை சொல்கிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.