ராதே ஷ்யாம் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்- படக்குழு முக்கிய முடிவு..!

 
ராதே ஷ்யாம்

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’ படம் ஓ.டி.டி-யில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதனுடைய திரையரங்க வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாஹோ படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் மற்றும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் பிரபாஸ் மும்முரமாக நடித்து வருகிறார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தை யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி வருகிறது. இந்த படம் தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளிவரவுள்ளது.

முன்னதாக இந்த படத்தை ஜூலை 30-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த படத்தை பிரபல ஓ.டி.டி தளத்திலும் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படக்குழுவினரின் முடிவால் ராதே ஷ்யாம் படம் திரையரங்குகளில் வெளிவருவது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.

From Around the web