குமார் கழுத்தை நெரித்து மரண பயத்தை காட்டிய அரசி.. சக்திவேல் ஷாக்..

 
1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் அரசி மூலமாக பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க சக்திவேல், குமார் இருவரும் பிளான் போடுகின்றனர். அடிக்கடி தனது மகனிடம் அவள் இங்க விடுற கண்ணீர்ல, அங்க மொத்த பாண்டியன் குடும்பமும் கதறனும் என சொல்லிக் கொண்டே இருக்கிறான் முத்துவேல். இதனிடையில் தனது அப்பா முத்துவேலை நேரில் சந்தித்து அரசி பற்றி பேசுகிறாள் ராஜி.

அரசி அந்த வீட்ல சந்தோஷமா இருக்காளா அப்பா. குமார் அவளை டார்ச்சர் பண்ணா, இந்த வீட்ல என்னை கதிர் டார்ச்சர் பண்ணுவான். என்னதான் உங்களுக்கு என்மேல கோபம் இருந்தாலும், நான் சந்தோஷமா இருக்கனும்னு நீங்க நினைப்பீங்க. ராஜியை சந்தோஷமா பார்த்துக்க சொல்லுங்கப்பா என்கிறாள். இதனையடுத்து குமாரை நேரில் அழைத்து பேசுகிறான் முத்துவேல். ராஜி கல்யாணம் பண்ணி பாண்டியனை பழிவாங்குனது எல்லாமே சந்தோசம் தான். ஆனால் இனிமேல் அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கனும்.

நீ அரசியை நல்லா பார்த்துக்கனும் என சொல்கிறான். இதனைக்கேட்டு சக்திவேல் காண்டாகிறான். இங்க அரசி கஷ்டப்பட்டால், அங்க அவரோட பொண்ணு ராஜியை டார்ச்சர் பண்ணுவாங்கன்னு நினைக்கிறாரு. அந்த ஓடுகாலி கஷ்டப்படனும். அதுக்காக இந்த அரசியை சும்மா விடாத என்கிறான். இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் சக்திவேல், குமார் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.

அப்போது அரசி சாப்பாடு பரிமாறும் போது வேண்டுமென்றே தட்டை நகர்த்துகிறான் குமார். இதனால் சாப்பாடு கீழே கொட்டுகிறது. உடனே அவன் இதையே நல்ல வாய்ப்பாக கருதி கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பிக்கிறான். உனக்கு ஒரு சாப்பாடு பரிமாற தெரியாது. வீட்ல நல்லபடியா வளர்த்து இருக்கனும். ஒழுங்கா வளர்க்கலை. நல்லது, கெட்டது கூட சொல்லி தரலை. வளர்ப்பு சரியில்லை. அதுதான் இங்க பிரச்சனையே என அனைவரும் முன்பாக சொல்லி அசிங்கப்படுத்துகிறான்.

தனது குடும்பத்தை பற்றிய பேசியதால் கடும் கோபம் அடைகிறாள். ஆனாலும் அங்கு அமைதியாக இருந்து விட்டு, குமார் ரூமுக்குள் வந்ததும் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கிறாள். குமார் ரூமுக்குள் வந்ததும் அவனை கீழே தள்ளிவிடுகிறாள். தாலியை அவனது கழுத்தில் போட்டு நெரிக்கிறாள். இதனால் குமார் நிலைகுலைந்து போகிறான். அவன் மயக்கமாக சூழ்நிலைக்கு வந்த பிறகு தான் விடுகிறாள்.

அதனை தொடர்ந்து சுயநினைவுக்கு வந்த அவன் உனக்கு என்ன தாண்டி வேணும் என கேட்கிறான். அதற்கு அரசி, நீ இப்படி கதறுட்டு இருக்க பாரு. அதுதான் எனக்கு வேணும் என சொல்லி தலையணை, போர்வையை எடுத்து வீசுகிறாள். ரூமை விட்டு வெளியே போ என சொல்லி துரத்துகிறாள். அவனை இங்க இருந்தால் அரசி கையாலே செத்துருவோம் என்ற மரண பயத்தில் வெளியில் போகிறான்.

அவன் ரூமை விட்டு வரும் சமயத்தில் கரெக்டாக சக்திவேலும் வெளியில் வருகிறான். அப்போது மகனுடைய நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் சக்திவேல், 

From Around the web